ஆண்டவனிடம் கேட்டதும்,கிடைக்கப் பெற்றதும்
நான் ஆண்டவனிடம் கேட்டதும்,அவனால் கிடைக்கப் பெற்றதும்...
நான் ஆண்டவனிடம் துணிவு,வலிமையினை கேட்டேன்.
ஆனால் அவன் எனக்கு இடர்பாடுகளை கொடுத்து என்னை மேலும் வலிமையுள்ளவனாக்கினான்...
நான் ஆண்டவனிடம் நுண்ணறிவாற்றலை கேட்டேன்.
அவன் எனக்கு பிரச்சனைகளை கொடுத்து நுண்ணறிவாற்றலுக்கு விடை காண தூண்டினான்...
நான் அவனிடம் சொத்து சுகத்தினை கேட்டேன்.
அவன் எனக்கு சிந்திக்கும் முளையையும்,வலிமையையும் கொடுத்து வேலை செய்ய தூண்டினான்...
நான் அவனிடம் வீரம்,துணிவினை கேட்டேன்.
அவன் எனக்கு ஆபத்தை கொடுத்து அதிலிருந்து விடுபடுவதெப்படி என்பதை கற்று தந்தான்...
நான் அவனிடம் அன்பாதரவிவை கேட்டேன்.
அவன் எனக்கு நல்ல சந்தர்பங்களை ஏற்படுத்தி கொடுத்தான்...
நான் கேட்ட எதுவும் அவன் எனக்கு கொடுக்கவில்லை.
ஆனால் எனக்கு தேவையான அனைத்தும் அவனால் கிடைக்கப்பெற்றேன்.
நேசத்துடன்
முஜிப்
1 Comments:
ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. ஆண்டவன் எதையும் கேட்டவுடன் கொடுக்காமல் கொடுப்பவன் என்பதை அனுபவித்து சொல்லியிருக்கின்றீர்கள்.
Post a Comment
<< Home