என் மன வானில்

Monday, August 20, 2007

நிஜம்‍ ஒரு உண்மை சிறுகதை

மனம் எங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க,பரிட்சைக்கு படிப்பது போன்ற பாவனையுடன் ஏதோ சிந்தனையில் சக அறை தோழன் ராஜாவிடம் வாங்கி கட்டிக்க கூடாது என்கிற பயத்தில் புத்தகத்தை புரட்டி படிப்பது போன்று பாவ்லா செய்து கொண்டிருந்தேன்.

இடையிடையே பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வந்து விட கூடாதென்று செய்யுளை உறக்க படித்து மனப்பாடம் செய்வது போன்று பில்டப் கொடுத்தேன்.

இடையில் அலைபேசி அழைப்பு வர நண்பன் ராஜா ஐந்து நிமிடம் வெளியில் சென்று வந்தவன் என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க , நானும் சம்பந்தமில்லாது ஏதும் உளரி வைக்காமல் திறு திறு வென விழிக்க, அப்போது தான் என் முகத்தில் ஓடியிருக்கும் சோக இழையை பார்த்த ராஜா தூக்கக் களை என்று நினைத்து கொண்டு "என்னடா தூக்கம் வருதா? நான் வேணும்னா போய் டீ வாங்கிட்டு வரவா" என்று கேட்ட , "இல்லடா, வேணாம் ஏன் உனக்கு சிரமம்" என்று விசயத்தை மேலும் சிக்கலாக்காமல் மழுப்பி முற்று புள்ளி வைத்தேன்.

ஏன் தான் இப்படி ஒன்றுமில்லாத அற்ப விசயத்துக்கெல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து மன சஞ்சலப் படுகிறேன் என்று எனக்கு நானே கேள்வி கேட்டு என்னை நானே திட்டி கொண்டேன்.

விடிந்தால் செமஸ்டர் தமிழ் தேர்வு.இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது.தமிழ் தானே.பரிட்சை சமயத்தில் ஒரு முறை பார்த்து கொள்ளலாம் என்கிற அலட்சியம் .நாளை காலை எழுதப்போதும் பரிட்சையில் பெயிலாகி விடுவோமோ என்கிற பயம் வேறு அவ்வப்போது என் மன வானில் தோன்றித் தோன்றித் மறைந்தது.

படிக்கவேண்டும்,எப்படியாவது முட்டி மோதி பாஸாகி விட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தும் கூட மனதுக்கேற்பட்ட கவலை எனும் கோளாறு காரணமாக படிப்பதற்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.

மணி இரவு 10:20 ஐ தாண்டி விட்டிருந்தது.எதோ ஒரு உறுத்தலில் அப்போது தான் படிக்க ஆரம்பித்திருந்தேன்.ராஜாவுக்கு மறுநாள் கணக்கு பரிட்சை.சந்தேகம் இருப்பதால் அவன் சக வகுப்பு நண்பன் அறைக்கு செல்வதாகவும் ,காலையில் தான் ரூமுக்கு வருவேன் என்று சொல்லி விட்டு சென்றிருந்தான்.

அவன் அறையை விட்டு சென்றது தான் தெரியும்.ஒரு பக்கம் கூட புரட்டி இருக்க மாட்டேன்.நன்றாக தூங்கி விட்டிருந்தேன்.மறுநாள் காலை ராஜா அறைக்கு வந்து எழுப்பினான். :டேய் 8 மணி ஆகிடுச்சி. இன்னுமா தூங்கற.போய் குளிச்சிட்டு வா.மெஸ் ஹால் போறதுக்கு நேரமாகிடுச்சி என்று சவுண்டு விட பதறி அடித்து எழுந்தேன். ஏதோ உலகமே முடிந்து விட்டது போன்ற உணர்வில் எனக்கு வியர்த்து விட்டிருந்தது.

இனி நம் கதை அவ்வளவு தான் என்கிற மன புழுக்கத்தில் நெளிந்த வண்ணம் பரிட்சை ஹாலுக்கு சென்று கேள்வித் தாளை வாங்கினேன். பதற்றத்தில் என்ன செய்வது என்று திகைத்த வண்ணம் அப்படியே ஸ்தம்பித்து கேள்வித்தாளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தேன்.

என்னங்க இன்னும் எந்திரிக்கலையா. மணி 8 ஆகுது.இன்னிக்கி ஆபீஸ் போகலையா என்று என் மனைவி அடுக்கடுக்கா கேள்வி கேட்டு அதட்டி எழுப்பி விட ,அப்போ இன்னிக்கி உண்மையில் தமிழ் பரிட்சை எழுத வேண்டாமா என்கிற சந்தோஷ களிப்பில் அலுவலகம் செல்ல ஆயத்தமானேன். ஏதோ தத்ரூபமாக உண்மையில் நடந்து கொண்டிருப்பது போன்ற பொய் கனவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷப் புன்முறுவலாக பெரு மூச்சு விட்ட படி.....

நேசத்துடன்
முஜிப்

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க‌

நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவருக்கும் என் சலாம் மற்றும் வணக்கங்கள்:)


சில பட பெயர்களை வைத்து சில சிரிப்பு சிந்தனைகள்.சிரிப்பதற்காக மட்டும்.:))

நானே ராஜா,நானே மந்திரி : அட இருந்துட்டு போயேன்.யாரு வேணாம்னா??

அலைகள் ஓய்வதில்லை : பெரிய ஆராய்ச்சி பண்ணி கண்டு புடிச்சிட்டாருய்யா.கண்டு புடிச்சிட்டாரு.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தம்பிக்கு எந்த ஊரு : சொன்னா என்ன எனக்கு கெளரவ டாக்டர் பட்டமா கொடுக்க போற.??

நான் அவன் இல்லை : அய்யோ அய்யோ தாங்க முடியலைடா சாமி.முதல்ல நீ நீ தானான்னு பாருப்பா.

வைகாசி பொறந்தாச்சி : அப்போ சித்திரை பொறக்கலையா.என்ன கொடுமை சார் இது.

பயணங்கள் முடிவதில்லை. : ஆமாம். அப்படியே not stop ஆ போயிகிட்டே இரு.வெளங்கிடும்.

போக்கிரி : உன் மூஞ்சிய முதல்ல கண்ணாடில்ல பாருப்பா.சிரிப்பு வருது.
புன்னகை மன்னன் : இப்படியே சிரிச்சிகிட்டே இரு. சீக்கிரமா கீழ்பாக்கம் போயிடுவே.

இளமை ஊஞ்சலாடுகிறது : அப்போ முதுமை ஊஞ்சலாடாதா??

காதல் அழிவதில்லை : பென்சிலால எழுதி ரப்பரால அழிச்சி பாரு .அழியும்.

நாளை நமதே : அப்போ இன்னிக்கி??

சின்ன தம்பி பெரிய தம்பி : அப்போ இடையில் ஒருத்தர் இருந்தா எப்படி கூப்பிடறது.




நேசத்துடன்
முஜிப்

Thursday, August 10, 2006

some cool proverbs

காமாலை கண்களுக்கு ,பார்ப்பதெல்லாம் மஞ்சளாகவே தெரியும்.
புதிய துடைப்பத்தால் பெருக்கினால் மிக நன்றாக சுத்தம் செய்யும்.அனால் பழைய துடைப்பானுக்கு தான் மூலை முடுக்குகள் எல்லாம் அத்துபடி.
கற்பனை எனும் காற்றாடியால் மட்டுமே உங்களால் மிக உயர்ந்த தூரத்தில் பறக்க முடியும்.
முயற்சியை கைவிடாத வரை நீங்கள் தோற்றவராக மாட்டீர்கள்.
கடனாக வாங்க படும் எந்த ஒரு பொருளின் விலையும் அதிகமாகவே தெரியாது. (வாழ்க கடன் அட்டை J)
அறிந்து கொள்ளுதல் மட்டும் போதாது.அதை செயலில் காட்ட வேண்டும்.
விருப்பப்படுவது மட்டும் போதாது.அதை செய்து காட்ட வேண்டும்.
ஒரு பிரச்சனையை எந்தளவுக்கு பெரியதாக பார்க்கிறீர்களோ,அந்தளவுக்கு பெரியதாக தெரியும்
பருவங்களில் பழங்கள் காய்க்கும்.காரணங்களால் கவலைகள் தாக்கும்.
நற்குணம் அழகை விட பன்மடங்கு மேன்மையானது.
பயனில பேச்சு நம்பகத்தன்மையை சாகடித்து விடும்.
அறிவுடையவராக இருத்தல் நலம்.அதை விட மேலானது அன்பாக நடந்து கொள்வது.
உத்தமன் தான் பின்பற்றும் நல்விசயங்களை மட்டுமே பிறருக்கு உபதேசம் செய்வான்.
போர் ஒரு போதும் யார் நல்லவர் என்பதை தீர்மானிக்காது.ஆனால் எத்தனை பேர் எஞ்சியுள்ளார்கள் என்பதை நிச்சயம் தீர்மானிக்கும்.

நேசத்துடன்
முஜிப்

Sunday, June 11, 2006

நினைவுகள்

தினம் தினம்...
வைகறையின் வசந்தமாய்
இளங்கதிரின் நம்பிக்கையாய்
தென்றல்காற்றின் மென்மையாய்
குயில்களின் சங்கீதமாய்
தமிழ்மொழியின் தேன்சுவையாய்
புயல் காற்றின் சீற்றமாய்
நடுஜாமத்து நிசப்தமாய்
முடிவில்லா கடலலை போல்
பல வித பரிணாமங்களுடன்
தனிமையின் ஊடே
வந்து வந்து செல்கிறது
உன் நினைவுகள்...

நேசத்துடன்
முஜிப்

Wednesday, June 07, 2006

தோல்வி

வாழ்க்கையை வெறுப்பது ஏனோ,
பெற்றோரை நினையாதது ஏனோ,
சுற்றத்தாரை மறப்பது ஏனோ,
நண்பர்களை துறப்பது ஏனோ,
வெற்றியே வாழ்க்கையாகிவிடுமா?
தோல்வியில் கண்ட படிப்பினையில்
உனை நீ ஏன் திருத்தி கொள்ளலாகாது?
பெற்றோர்,உறவினர்,நண்பர்களின் சந்தோஷத்தை
பூர்த்தி செய்வதும் உன் கடமையல்லவா?
உயிரை மாய்த்து கொள்வதும்,
நடைமுறையை விட்டு தூரம் செல்வதும்
உன் தோல்விக்கு தீர்வாகி விடுமா?
உன் தனிபட்ட தோல்விக்காக
உனை சூழ்ந்துள்ளவர்களையும்
சோகத்தில் ஆழ்த்துவது நியாகமாகுமோ?
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி,
கூடியுள்ளவர்களின் நிறைவில்
உன் நிறைவை காண
ஆவண செய்வாய் மானிடா...

நேசத்துடன்
முஜிப்

Tuesday, June 06, 2006

காதலெனும் கிருமி

வாழவும் வைக்கும்..
வீழவும் வைக்கும்..
நோகவும் வைக்கும்..
சாகவும் வைக்கும்..
துணிவை கொடுக்கும்..
தூக்கத்தை கெடுக்கும்..
நிதானத்தை குலைக்கும்..
குடும்பத்தை கலக்கும்..
கட்டுகோப்பை குலைக்கும்..
எதிர்ப்பை கொடுக்கும்..
ஏக்கத்தை கொடுக்கும்..
புரிதலை கொடுக்கும்..
மகிழ்ச்சியை கொடுக்கும்..
கலங்கவும் வைக்கும்..
பக்குவ படுத்தும்..
பரவச படுத்தும்..
பைத்திய மாக்கும்..

நேசத்துடன்
முஜிப்

Saturday, May 27, 2006

மறக்க முடியாத தருணம்


உயிரை கொடுப்பதும் உயிரை எடுப்பதும் இறைவன் கையில் தான் உள்ளது.நம் கையில் இல்லை என்பதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த மறக்க முடியாத சம்பவம்.

ஒரு இரண்டு வருடத்துக்கு முன் அல்ஹசா என்னும் இடத்தில் எங்கள் நிறுவனத்தின் தலைமையகம் செயல் பட்டு வந்தது.அது நகரின் புறத்தே 20 கி.மீ தூரத்தில் அமைந்திருந்தது.தங்குமிடம்,உணவு விடுதி ,அலுவலகம் அனைத்தும் ஒருங்கே அமைய பெற்றிருந்தது.

ஒரு நாள் மதிய இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக நான் மற்றும் கூட பணிபுரியும் நண்பர்கள் இருவரும் campus யின் உள்ளே அமைந்துள்ள உணவு விடுதிக்கு அரட்டை அடித்து கொண்டு எப்போதும் போல நடந்து சென்று கொண்டிருந்தோம்.

இவ்வளவுக்கும் மூவரும் நடந்து சென்றது ரோட்டின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் தான்.நடைபாதையை ஒட்டி மணல் முட்டுகளால் பரப்பப்பட்டிருக்கும்.இடைவெளிகளில் பசுமையான மரங்கள் அழகிய முறையில் கிளைகள் வெட்டபட்டு சூழ்ந்திருக்கும்.

சாதரணமாக campus யின் உள்ளே அதுவும் உணவு விடுதிக்கு செல்லும் வழியில் ஒரு போதும் வாகனங்கள் வர வாய்ப்பில்லை.அனுமதியுமில்லை.அவசரத்துக்கு சமயங்களில் சூப்பர்வைஸரின் கண்களில் மண்ணி தூவி விட்டு சில விற்பனை பிரதிநிதிகள் வேனை எடுத்து கொண்டு வந்து விடுவார்கள்.

எப்போதும் ரோட்டில் நடந்து செல்லும் நாங்கள் அன்றைய தினம் வெயில் அதிகம் இருந்ததாலும் நடைபாதையை ஒட்டி மரங்கள் இருப்பதனாலும்,நிழலுக்காக ரோட்டில் நடக்காமல் நடைபாதையில் நடந்து சென்றோம்.

சில வினாடிகளில் நடைபாதையில் ரோட்டை ஒட்டி வந்துகொண்டிருந்த நான் அசுர வேகத்தில் பின்னால் வந்த வேனின் adjustable கண்ணாடியின் விளிம்மில் என் தலையின் பின்பக்கம் பலமாக தாக்கபட்டு, அடிபட்டு நல்லவேளையாக மணல் குவியல்களில் தூக்கி எறியபட்டேன். மயக்கமுற்றேன்.
வேன் வந்ததோ அடிபட்டதோ எதுவும் எனக்கு தெரியாது.சிறிது நேரம் கழித்து தண்ணீர் முகத்தில் தெளித்ததற்கப்புறம் தான் நான் அடிபட்டது எனக்கே தெரிந்தது.

அன்று நான் உயிர் பிழைத்தது அபூர்வம்.மயிரிலையில் தப்பினேன். ஒரு செண்டிமீட்டர் இடைவெளி கூடியிருந்தால் கண்ணாடி இரும்பு போஸ்டில் சிக்கி மரணமடைந்திருக்க கூடும்.மேலும் அக்கண்ணாடியானது folding திருப்பும் விதத்தில் அமைய பெற்றிருந்ததால் அடிப்பட்ட மாத்திரத்தில் கண்ணாடி திரும்பிய வேகத்தில் என்னை மணலில் தூக்கி எறிந்து விட்டது.
எனவே எந்த ரத்த காயமோ வண்டிக்கு சிறு சிராப்பு கூட இல்லை.தலையில் பலத்த அடிபட்டால் மூக்கிலிருந்து ரத்தம் வர கூடாதாம்.நல்ல வேளை அப்படி எதுவும் ஆகவில்லை.

இருந்தாலும் உயிர் போகும் அளவுக்கு வலி இருந்தது.ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு மூளைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று சொன்னார்கள்.

அன்று நான் பிழைத்தது இறைவனின் அருளால் அன்றி வேறொன்றும் இல்லை.நான் அன்றைய தினம் பிழைத்து கொள்வேன் என்று எழுதபட்டிருக்கின்றது போல.

அதனால் அன்றைய தினம் மயிரிழையில் உயிர் தப்பினேன்.போஸ்டில் சிக்கி அடிபட்டு அன்றைய தினம் மரணித்திருந்தால் அடிபட்டது தலை என்பதால் நான் இறக்க போவது எனக்கே தெரிந்திருக்காது.எல்லாவற்றையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது,நம்மையெல்லாம் இயக்குகிறது உண்மை என்பதை அன்றைய தினம் கண்ணீர் மல்க அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

நேசத்துடன்
முஜிப்

Wednesday, May 24, 2006

முரண்பாடு

அடுத்தவர் குறைகளை
அலசி ஆராய்ந்து
ஏளனம் நிறைந்த குத்தல்
பேச்சுக்களால் துளைத்தெடுக்க
சிரத்தை எடுக்கும் மானிடா,
நீ உன் குறைகளை
அலசி ஆராய்ந்து
களை எடுக்க
சிரத்தை எடுக்காதது ஏனோ???

~முஜிப்

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

குண்டக்க மண்டக்க
ஒரு பொண்ணு கலகலன்னு எப்போதும் சிரிச்சிட்டுருந்தா
அவளுக்கு பெயர் கலகலப்பானவள்:-)

ஆனா ஒரு ஆம்பள கலகலன்னு எப்போதும் சிரிச்சிட்டுருந்தா
அவனுக்கு பெயர் மற கழண்டவன்.:-(

ஒரு பொண்ணு ஒரு பையனை பார்த்து
லுக்கு விட்டா அவன் முகத்தில் உதிர்வது
மகிழ்ச்சி கலந்த புன்னகை...

ஒரு பையன் ஒரு பொண்ண பார்த்து
லுக்கு விட்டா அவள் முகத்தில் உதிர்வது
கோபம் கலந்த முறைப்பு...

நெஞ்சு பொறுக்குதில்லையே.......
பாவம்பா ஆம்பள பசங்க......
ஹா ஹா ஹா

நேசத்துடன்
முஜிப்

Thursday, May 18, 2006

மறக்க முடியாத தருணம்

எப்போது என் மனைவியிடம் தொலைப்பேசும் போது என் செல்ல மகள் என்ன செய்கிறாள்,என்ன சொல்கிறாள் என்று கேட்டறிவது வழக்கம்.அது போல இன்று தொலைபேசும்போது கேட்டேன்.

இரண்டொரு நாட்களுக்கு முன் சற்று சீக்கிரமே என் மகளை படுக்க சொல்லியிருக்கிறாள் என் மனைவி.படுத்திருந்த என் மகள்,சிறிது நேரம் கழித்து என் மகள் அடுக்களையில் இருந்த என் மனைவியின் காதில் விழும்பைடி "அம்மா இங்கே வாயேன்.உன்னிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்" என்று கூப்பிட்டிருக்கிறாள்.

சரி ஏதோ சேதி சொல்ல தான் கூப்பிடுகிறாள் என்று அப்படி என்ன செய்திடி என்று கேட்டு கொண்டே என் மனைவி அவள் அருகில் செல்ல கிட்ட வா என்று கூப்பிட்டு என் மனைவியை உட்கார சொல்லி கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டுட்டு வாம்மான்னு நக்கலடித்திருக்கிறாள்.

என் மனைவிக்கு கோபம் சுறீரென்று உடனே வந்தாலும் அடக்கி கொண்டு குபீரென சிரித்திருக்கிறாள்.
இந்த செய்தியை என் மனைவி இன்று தொலைபேசும் போது சொல்ல நான் இல்லாத குறையை உனக்கு என் மகள் தீர்த்து வைக்கிறாள் என்று என் மனைவியிடம் சொல்ல,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்று என் மனைவி அலுத்து கொள்ள, நான் விழுந்து விழுந்து சிரிக்க என் மனைவியும் சிரித்து வயிறு வலி எடுத்துடுச்சி போங்க...

நேசத்துடன்முஜிப்

Wednesday, May 17, 2006

வாழ்க்கை பயணம்நாம்

நாம் வாழும் வாழ்க்கையானது
ஒரு சிக்கலான பயணத்தை போன்றது.
பிரத்யேகமாக நாம் செல்லும்
இலக்கை பொறுத்து
போகுமிடங்களில் இடைஞ்சல்களை,
தடைகற்களை தாண்டி செல்லும் பயணமாக.
நித்தமும் பிரகாசமாகவும்
மகிழ்ச்சியுடனும் நன் வாழ்வு
அமையாதன்றோ அது போல......

நேசத்துடன்முஜிப்

Tuesday, May 09, 2006

கண்ணீர் Vs நீர்வீழ்ச்சி

கவலையெனும் முகாந்தரமாய் உருவெடுத்து,
ஓடும் வழிகளில் மன அழுத்தமெனும்
மூலிகைகளில் கலந்து,
சோகத்தின் பிரதிபலிப்பாய்
பிணி போக்கும் நிவாரணியாய்,
பருவ மழை பொய்பித்தாலும் கூட
வற்றாத ஜூவ நதியாய்,
பொய்ப்பிக்காமல் கொட்டுகிறது அருவி....


முஜிப்-அல்கோபர்

Friday, May 05, 2006

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

நடு சாமத்தில் தீடீரென தூக்கம் கலைந்த மனைவி உடன் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள்.

கடைசியாக கீழ் தளத்தில் கணவனின் முனகல் சத்தத்தை கேட்டு மாடியிலிருந்து கீழ் இறங்கி வந்து விளக்கை போட்டு பார்க்கும்போது ஆச்சர்ய படும்படி தன் கணவன் ஒரு பந்தை போல் முழங்காலை மடித்து குருகி உட்கார்ந்தவராய் கன்னத்தில் கையை வைத்து கொண்டு விம்முவதை பார்த்து, "இந்த நடு சாமத்தில் ஏன் என்னாச்சு உங்களுக்கு", என்று பதற்றபட்டவளாய் கணவனிடம் வினவ, அதற்கு கணவன்,20 வருடத்துக்கு முன் உன்னை கர்ப்பமாக்கினேனே,அது உனக்கு ஞாபகமிருக்கிறதா?.
அதற்கு மனைவி, மறக்க கூடிய விசயமா அது? அதுக்கென்ன இப்போ?.
அந்த சமயத்தில் உன் (வழக்கறிஞர்) அப்பா,உன்னை கல்யாணம் பண்ணிகலன்னா 20 வருஷம் உள்ள தள்ளிடுவேன்னு பயமுறுத்தினாரே? ஞாபகமிருக்கிறதா?
ம். அதுக்கென்ன இப்போ?
வேறுன்னுமில்ல,அழுகையை அடக்க முடியாது உடல் குலுங்கியவராய்,"அப்போதே நான் ஜெயிலுக்கு போயிருந்தேன்ணா நேற்று நான் விடுதலையாகியிருப்பேன்"

ஹா ஹா

முஜிப்

Tuesday, May 02, 2006

ஓவியமும் வாழ்க்கையும்


வாழ்க்கையென்பது வர்ணமடிக்க பயன்படும் பலகை போன்றது.

உங்கள் மேனி,பண்பு இன்னும் நாடு மற்றும் குடும்ப பிறப்பிடம் போன்ற பண்பு நலன்களால் ஓர் ஆன்மாவாக நீங்களே உங்கள் ஆரம்ப நிறத்தினை தெரிவு செய்கிறீர்கள்.

பின்பு வாழ்க்கையெனும் கலைத்திறனை வரைய வண்ணந் தீட்டும்
தூரிகையோடும்,வண்ணங்களோடும் வாழ்க்கையெனும் பயணத்தில் சங்கமிக்கிறீர்கள்.

இந்த இடத்தில் தான் அதிகமானோர் தடுமாறுகிறார்கள்.

வாழ்க்கையெனும் வர்ணந் தீட்டும் தூரிகையால் வர்ணங்களை ஒன்றின் மேல் ஒன்றாக தவறுதலாக தெளித்து விட்டு நம் வாழ்க்கை எனும் ஓவியம் நாம் நினைத்த மாதிரி அமையவில்லையே என்று வியந்து கொள்கிறார்கள்...

உங்கள் வாழ்க்கையானது எவரேனும் ஒருவரின் தவறோ,பிழையோ அல்லது பொறுப்பாகவோ ஒரு போதும் ஆகாது.

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளானது மகிழ்ச்சி எனும் வர்ணம் தீட்டும் தூரிகையால் உங்களுக்கு பிடித்த உண்மையான வாழ்க்கை எனும் ஓவியத்தை வரைவதாகும்.

இவ் ஓவியத்தை சரியென்றோ தவறென்றோ கொள்ளலாகாது என்றாலும் கூட நீங்கள் இதில் ஒரு போதும் தோல்வி அடைய மாட்டீர்கள்.!!!!!!!
முஜிப்-அல்கோபர்

Saturday, April 29, 2006

பரவசம்-ஓர் கவிதை


முதன் முதலில்....

மழலை மொழி பேச
கேட்ட தாய் அடைந்த
பரவசத்தை போல...

முதல் மதிப்பெண் எடுத்து
தேர்ச்சி பெற்ற மாணவனின்
பரவசத்தை போல...

லாட்டரியில் முதல் பரிசு
கிடைக்க பெற்ற வறியனின்
பரவசத்தை போல...

அறுவடையில் அமோக மகசூல்
பெற்ற ஏழை விவசாயியின்
பரவசத்தை போல...

தவம் இருந்து பெற்றெடுத்த
குழந்தையை பார்த்த தம்பதியினரின்
பரவசத்தை போல...

பாகுபாடு இல்லா மனிதநேயம்
போற்றிடும் உங்களை நட்பாக
கிடைக்கபெற்ற நான்
மகிழ்ச்சியில் பரவசமடைகிறேன்.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

Tuesday, April 25, 2006

சில தலைப்புகளும் அதன் குளிர்ச்சியான அர்த்தங்களும்...


சில தலைப்புகளும் அதன் குளிர்ச்சியான அர்த்தங்களும்

சிகரெட்: ஒரு காகிதத்தில் சுற்றப்பட்ட சிட்டிகையளவு புகையிலையில் நெருப்பு ஒரு முனையிலும்,முட்டாள் மறுமுனையிலும்.

காதல் விவகாரம்: ஒரு வகையில் கிரிக்கெட்டை போன்றது.,ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் போட்டிகள் மிகவும் பிரபலமானதாகவும்,விறுவிறுப்பாகவும் இருக்கும்.

கல்யாணம்: இவ்வுடன்படிக்கையுன்படி ஆண்கள் தங்கள் பேச்சலர் டிகிரியை இழந்தும்,பெண்கள் மாஸ்டரையும் அடைய பெறுவார்கள்.

விவகாரத்து: திருமணத்தின் எதிர்கால வினைச்சொல்.

விரிவுரை(லெக்சர்): இக்கலையின் படி விரிவுரையாளரின் கையேட்டிலிருந்து, குறிப்புகள் மாணவர்கள் குறிப்புகள் கையேட்டுக்கு கடந்து செல்லும் தன்மை கொண்டது.ஆனால் இவர்களிருவரின் மூளைகளையும் கடந்து செல்லாது என்பது தான் இதன் சிறப்பம்சமாகும்.

மாநாடு(கலந்தாய்வு கூட்டம்): மாநாட்டிற்கு வந்துள்ள ஒருவரின் குழப்பத்தை, பங்கு கொண்டிருக்கும் ஒட்டு மொத்த நபர்களின் எண்ணிக்கையால் பெருக்கி கொள்ள வேண்டும்.

சமாதானம்: இக்கலையின் எடுத்துக்காட்டு என்னவென்றால் ஒரு கேக்கை சமபங்காக வெட்ட வேண்டும்.வெட்டபட்ட கேக்கை சாப்பிட்ட அனைவரும் தனக்கு கிடைத்த துண்டே மிகப் பெரியது என்று திருத்திபட்டு கொள்ள வேண்டும்.

கண்ணீர்: நீரோட்ட உந்துதல் விதியின் படி பெண்களின் தண்ணீர் சக்தியால் ஆண்களின் மனோதிட சக்தி தோற்கடிக்கப்படும்.

மாநாட்டு அறை: இங்கே பேச்சாளருடைய பேச்சை செவி மடுக்காமல்,அனைவரும் பேசி கொண்டும் அரட்டை அடிக்கவும் உபயோகப்படும் இடம்.கடைசியில் கலந்து கொண்ட அனைவரும் கருத்து வேறுபாடு கொள்வார்கள்.

இலக்கியம்: அனைவராலும் போற்றப்படும் புகழ்ந்து பேசப்படும் ஓர் உன்னதமாக புத்தகமாகும்.கூத்து என்னவென்றால் யாரும் இதை படிக்க மாட்டார்கள்.

புன்னகை: வளைவு கோடுகளாக இருந்தாலும் பல விசயங்களை நேர்படுத்தும் தன்மை கொண்டது.

கொட்டாவி: திருமணமான சில ஆண்கள் வாயை திறக்க அனுமதிக்கபடும் நேரம்.

Etc., : உண்மையாகவே தெரிந்ததை விட அதிகமான விசயங்கள் தெரிந்திருப்பவர் என்று அடுத்தவர்களை நம்ப வைக்க உபயோகப்படுத்தபடும் குறிப்பு.

அனுபவம்: தான் செய்த தவறுகளுக்கு மனிதனால் கொடுக்க பெற்ற பெயர்.

அணுகுண்டு: கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை அழித்தொழிக்க பயன்படும் கண்டுபிடிப்பு.

சந்தர்ப்பவாதி: தவறுதலாக ஆற்றில் விழுந்தாலும் கூட குளிக்கும் தன்மையுடையவர்.

எஜமானன்: நீங்கள் தாமதமாக செல்லும்போது முன்னதாகவும்,நீங்கள் முன்னதாக செல்லும் போது தாமதமாகவும் வருபவர்.

அரசியல்வாதி: தேர்தலுக்கு முன் கையை குலுக்குவார்.தேர்தல் முடிந்த பின் நம்பிக்கையை குலுக்குவார்.

மருத்துவர்: சுகவீனங்களை மருந்துகளாலும்,நோயாளியை சேவை கட்டணத்தாலும் கொல்லுவார்.

கடன்: வாங்குபவருக்கு கொடுப்பவர் கடவுளாகவும்,இனிப்பாகவும் தெரியும்.திருப்பி கொடுக்கும் போது கொடுத்தவர் விரோதியாகவும் கசப்பாகவும் தெரியும்.


mujibudeen@gmail.com
முஜிப்-அல்கோபர்

Sunday, April 23, 2006

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...

பஸ் நிழற்குடையில் நின்று கொண்டிருக்கும் ஓருவரை (X) விற்பனை பிரதிநிதி( Y) தன் கம்பெனியின் பொருட்களை சந்தை படுத்தும் நோக்கில் பேச்சு கொடுக்கிறார்.இவர்கள் இருவருக்குமிடையே நடந்த சுவையான உரையாடல்கள் இதோ உங்கள் பார்வைக்கு...

X: நீங்கள் எந்த மாதிரி சேவிங் கீரிம் உபயோகிக்கிறீங்க?
Y: பாபாவோட...

X: சவரம் செய்த பிறகு எந்த வகை aftershave உபயோகிப்பீங்க?
Y: பாபாவோட...

X: எந்த வகை டியோடரண்ட் உபயோகிக்கிறீங்க?
Y: பாபாவோட...

X: பல் துலக்க எந்த வகை பற்பசை பயன்படுத்துவீங்க
Y: பாபாவோட...

X: எந்த வகை ஷாம்பூ அதிகம் பயன்படுத்துவீங்க?
Y: பாபாவோட...

X: எந்த வகை உள்ளாடைகள் விரும்பி அணிவீங்க?
Y: பாபாவோட...

X: மலைத்து போய்,ஆச்சர்யத்துடன் சரி பாபா ங்கிறது ஒரு பன்னாட்டு நிறுவனமா?நான் கேள்விபட்டதே இல்லையே???
Y: இல்லையில்லை.பாபா என் ஓரறை தோழன்(roommate).

ஹா ஹா ஹா....

முஜிப்-அல்கோபர்
mujbudeen@gmail.com

கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுப்போம் வாங்க

சரி நான் ஓரு புதிர் போட்டு பார்க்கிறேன்.
ஒருவர் கையில் கொஞ்சம் பூக்களுடன் கோவிலுக்கு செல்கிறார்.

கோவில் வாசலில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை போட்டால் தான் வாசல் கதவு திறக்கும்.

மூன்று வாசல்களை கடந்து தான் தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.

தெப்ப குளத்தில் அவர் எத்தனை பூக்களை போடுகிறாரோ அது இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கும்.

மூன்று முறை தான் குளத்தை உபயோகிக்கமுடியும்.

--------------------------------------------------------------

முதலில் குளத்தில் அவர் கொண்டு வந்த பூக்களை போடுகிறார்.அது இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.

அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை முதல் வாசலில் போடுகிறார்.முதல் வாசல் திறக்கிறது.

மீண்டும் தெப்ப குளத்தில் மீதமுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.

அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை இரண்டாவது வாசலில் போடுகிறார்.இரண்டாவது வாசல் திறக்கிறது.

மீண்டும் தெப்ப குளத்தில் எஞ்சியுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கிறது.

கிடைத்த அனைத்து பூக்களையும் மூன்றாவது வாசலில் போடுகிறார்.கதவு திறக்கிறது.தரிசித்து விட்டு வெருங்கையுடன் வீடு திரும்புகிறார்.

கேள்வி இது தான்.

1)அவர் எத்தனை பூக்கள் வரும்போது கையோடு எடுத்து வந்தார்?

2)ஒவ்வொரு வாசலிலும் கதவு திறக்க எத்தனை பூக்களை போட்டார்?

பி.கு : மூன்று வாசல்களையும் திறக்க ஒரே எண்ணிக்கையிலான பூக்கள் தான் போட பட வேண்டும்.

எங்கே விடை சொல்லுங்கள் பார்ப்போம்??

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

Saturday, April 22, 2006

கவலை எனும் சக்கரம்

கவலை உணர்வு வந்தால்
மனசு முழுக்க!!!

அமைதியை நாடுது..
நேர்வழியை தேடுது..
பாவ மன்னிப்பு கோருது..
குற்ற உணர்ச்சிகள் குத்தூசியாய் குத்துது..
சபல புத்திக்கு சவுக்கடி கொடுக்க துடிக்கிது..
கெட்ட எண்ணங்கள் தலைதெறிக்க ஓடுது..
இறைநம்பிக்கை மேலோங்குது..
நற்செயல்கள் செய்ய தூண்டுது..
பிராத்தனைகள் வேண்டுது..
சற்று கவலை தீர்ந்த பின்
மகிழ்ச்சி குடிபுகுந்து,
சந்தோஷம் ஆரம்பமானால்
மெல்ல மெல்ல அனைத்தையும் மறந்து
வேதாளம் பழையபடி முருங்கைமரம் ஏறி
மிருகமாய் மாறுது.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

Tuesday, April 18, 2006

மறக்க முடியாத தருணங்கள்-9

சமீபத்தில் எங்கள் செல்ல மகளை பள்ளியில் சேர்த்தாச்சு. இன்னும் பள்ளி செல்லவில்லை.ட்யூஷன் படிச்சிட்டுருக்காங்க.

கொஞ்ச நாட்களுக்கு முன் என் மகளிடம் தொலைபேசும்போது (எங்கூட்டு காரங்க SSLC வரை தான் படிச்சிருக்காங்க.) உங்க அம்மா மாதிரி படிக்காம இருந்திடாதே.உன் டாடி மாதிரி நல்லா படிச்சி பெயர் வாங்கணுன்னு விளையாட்டாய் சொன்னேன்.

இத லவ்டு ஸ்பீக்கர் மோட்ல கேட்டுட்டு உடனே போனை பிடுங்கி என் மனைவி ஒரே திட்டு.ஒன்னும் சொல்ல முடியாம வாங்கி கட்டிகிட்டேன்.

பிரச்சனை என் மனைவி திட்டினது இல்லை.சரி விசயத்துக்கு வருகிறேன்.இரண்டொரு நாட்களுக்கு முன் என் மனைவி,என் மகளை படிக்க சொல்லி பக்கத்தில் உட்கார்ந்திருக்காங்க.

அப்போ என் மகள் கேட்டிருக்கா.

"ஏம்மா டாடி என்னைய மாதிரி நல்லா சவுதில படிக்குதாம்மா.நீ மட்டும் ஏன் படிக்காம சும்மா என்னை மட்டும் படிக்க சொல்லுற.டாடி மாதிரி நீயும் படிக்கலாம்ல " என்று கேட்க,திடீர் கேள்வி கணைகளால் திக்குமுக்காடி பதில் சொல்ல முடியாமல் எங்கூட்டுகாரங்க சிரிச்சி,வழிஞ்சி ஒரு வழியா பதில் சொல்லி சமாளிச்சிருக்காங்க.

என் மனைவி தொலைபேசியில் இந்த சுவையான நிகழ்வை சொல்லும் போது நான் சிரித்தாலும் கூட,என் செல்ல மகளின் லூட்டிகளை நேரில் இருந்து பார்த்து ரசிக்க முடியாததை நினைத்து மனசுக்குள் ஏக்கம் ஏற்பட்டு புழுங்கியது என்னவோ உண்மை.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

Sunday, April 16, 2006

மறக்க முடியாத தருணங்கள்-7

தார்குச்சிக்கு பற்றிய ஓர் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று.

வெள்ளிகிழமை தோறும் எங்கள் ஊர் காரர்கள் 5-8 பேர் அருகில் உள்ள ஊர்காரர் ஒருவரின் வீட்டில் கூடி விடுவோம்.
கூடி ஊர் செய்திகள்/பிரச்சனைகள்,உலக கதை/பிரச்சனை என்று கலகலப்பாக நேரம் போறதே தெரியாது.அப்படி ஓரே அரட்டையாக இருக்கும்.

இதே உண்மையில் ஊரில் இருந்திருந்தால் கூட இவ்வளவு அக்கறையோடு,செய்திகளை பறிமாறி இருப்போமா,தெரிந்திருப்போமா என்றால் நிச்சயம் இருந்திருக்கவே இருக்காது.ஒன்றை இழந்தால் தான் அதன் உண்மையான மதிப்பு அறியப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இது போல ஒரு வெள்ளிகிழமை அரட்டை அடித்து விட்டு மதியம் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தோம்.அன்று வழக்கத்துக்கு மாறாக தாள்சா(சாம்பார்) சாப்பாடு. எனக்கு சாப்பாடு சரியாக உள்ளே செல்லவில்லை.

நான் எப்போதும் வீட்டில் சொல்லுவது போல் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தார்குச்சி இருக்கிறதா என்று கேட்டு விட்டேன்,தெரியாத்தனமாக.

எல்லோரும் என்னை பார்த்து முறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.அதில் ஒரு நண்பர் என்னப்பா முஜிப் கொஞ்சம் முன்னடி நல்லா தானே இருந்தே என்ன திடீரென இப்படி ஆயிட்டப்பா? என வினவினார்.இன்னொருத்தர் தார்குச்சின்னா ஊருக்கு தான் போய் வாங்கிட்டு வரணும் னார்.

ஆளாளுக்கு ஒண்ணொன்னு சொன்னாங்க.இப்ப நீங்களும் குழம்பியிருக்கிற மாதிரி,என்னடா இவன் தார்குச்சியை கேட்கிறானேன்னு.?

எல்லாத்தையும் வாங்கி கட்டி கொண்டு நான் ஒரு கேள்வி கேட்டேன். மாடு சரியா ஓடலைன்னா என்ன பண்ணனும்னு.?அதுக்கு ஒருத்தர் தார்குச்சியால ஒரு போடு போட்டா தானா ஓடுதுண்ணார்.அதத் தான் நானும் கேட்டேன்னு சொன்னேன்.

சாம்பார் சாப்பாடு சரியாக இறங்க மாட்டுது.தார்குச்சி போன்ற ஊறுகாயை கொடுத்தீங்கண்னா என் சாப்பாட்டு வண்டி நல்லா ஓடும்பா என்று நான் நகைச்சுவையா சொன்னவுடன் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்பல்லாம் சாப்பிட உட்கார்ந்தாலே முஜிபுக்கு தார்குச்சிய முதலில் எடுத்து கொடுங்கப்பா ன்னு அடிக்கடி ஒரு நண்பர் கிண்டலடிப்பார்.

நேசத்துடன்
முஜிப்

Monday, April 10, 2006

நான் ரசிக்கும் கிராம வாழ்க்கை.

நான் ரசிக்கும் கிராம வாழ்க்கை.
கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் அருமை என்னவென்று.
  • நட்பு வட்டம்.
  • உறவினர் வட்டம்.
  • ஊரார் வட்டம்
என்று அமர்க்களபடும் கிராமங்களில்.
  • ஓர் சின்ன விசயம் என்றாலும் கூட வீடுகளில் உறவினர்களும் நண்பர்களும் கூடி விடுவார்கள்.
  • சொந்த பந்தங்கள் ஊரார் அனைவரையும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
  • சிறிது நாட்கள் வெளியூர் சென்று திரும்பினாலும் கூட பார்ப்பவர் அனைவரும் நலம் விசாரித்து அன்பு மழை பொழிவர்.
  • சமயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வீடுகளில் உதவு கோராமலேயே உதவி கொண்டிருப்பார்கள் நல விரும்பிகள்.
  • பலனை எதிர்பார்க்காது பழகும் தன்மையையும்,ஊருக்காக ஊர் நலனுக்காக தங்களை அர்பணித்து கொள்ளும் பெரியவர்களையும் சிறியவர்களையும் அதிகம் கிராமங்களில் காணலாம்.
  • பச்சை பசேல் வயல்வெளிகள், ஆறுகள், குட்டைகள், குளங்கள், ஆராவாரமற்ற நெருக்கடி இல்லாத ரம்மியமான சூழ்நிலை,என்று கிராமங்களில் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்.
  • பணம் ஒன்றே குறிக்கோள் என்றில்லாதவர்கள் நிச்சயம் கிராமங்களையும் அதன் வேர்களாக பிண்ணி பிணைந்திருக்கும் சொந்த பந்த நட்புகளை விட்டு ஒரு போதும் தூரம் சென்றுவிடமாட்டார்கள்.
கிராமங்களில் தற்காலத்திற்கேற்ப வசதி வாய்ப்புகளும் நவீன வசதிகளும் சற்று குறைவாகவே இருந்தாலும் கூட மனம் லயிக்கும் கிராமத்தின் சிறப்புகளுக்கும் சொந்த பந்த நட்புகளின் அன்புக்கு முன்னால் என் பார்வையில் கிராம,நகர வாழ்க்கைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது கிராம வாழ்க்கையே மேலாதனாகவும் மேலூங்கியும் கம்பீரமாக நிற்கிறது.

நேசத்துடன்
முஜிப்

மறக்க முடியாத தருணங்கள்-8

மறக்க முடியாத தருணங்கள்-8

சமீபத்தில் இங்கு அல்கோபரில் வழமையாக உணவருந்த செல்லும் ஹோட்டலுக்கு என் நண்பர்களுடன் சென்றிருந்தேன்.நண்பர்களில் ஒருவன் எப்போதும் சிரிக்கும் படியாக ஜோக் அடித்து கொண்டே இருப்பான்.

ஆளாளுக்கு தேவையானதை ஆர்டர் செய்தோம். இவனை தவிர அனைவரும் சிக்கன் ப்ரை ஆர்டர் கொடுக்க (இவனுக்கு பறவை காய்ச்சல் வந்து விடுமோ என்று பயம்னு நினைக்கிறேன். ஏன் என்று சொன்னால் எப்போதும் சிக்கன் ஆர்டர் கொடுப்பவன் எனக்கு சிக்கன் வேண்டாம் மட்டன் குருமா வேணும்மு ஆர்டர் கொடுத்தான்).

மட்டன் குருமா முந்தைய நாள் சமைத்ததை ரீமேக் போல சுவையே இல்லை போலிருக்கு. இவன் உடனே சர்வரை கூப்பிட்டான். இங்க பாருங்க என் கிட்ட ஒரு மக்கினா (அரபியில் மக்கினா என்றால் இயந்திரம்) இருக்கு. அது பொய் பேசினா உடனே சத்தம் கொடுக்கும் என்று சொல்லி விட்டு மட்டன் குருமா எப்ப ரெடி பண்ணது ன்னு கேட்டான்.

வழக்கம் போல் வழமையாக சொல்வது போல் சர்வர் "இன்னிக்கி தாங்க சமைத்தது" என்று சொல்ல, இவன் உடனே "டோன்ய்ய்ய்ய்" என்று சத்தம் கொடுக்க உணவருந்துபவர்கள், உரிமையாளர் உட்பட அனைவரும் அடக்க முடியாமல் குபீரென சிறிது நேரம் சிரித்து விட்டனர்.

நேசத்துடன்
முஜிப்

வெற்றியின் ரகசியங்கள்

வெற்றியின் ரகசியங்கள்

கப்பல் கரையில் இருந்தால் பாதுகாப்பாக, பத்திரமாகத் தான் இருக்கும். ஆனால் கப்பல் தயாரிக்கப்பட்டதன் குறிக்கோள் இதற்காக அல்ல.

ஒரு காரியம் எடுத்து செயல்படுத்தும் தருணங்களில் சமயங்களில்,இன்னல் துயரங்கள்,கஷ்டங்களை சந்திக்க நேரிடுவது வாடிக்கையே. இதனை கண்டு நாம் சோர்ந்து விடுதல் கூடாது.

நாம் நெஞ்சுரத்தையும்,மனோவலிமையையும் தைரியத்தையும், கஷ்டநஷ்டங்களை சமாளிக்கும் யுக்திகளை வளர்த்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும்.அப்போது தான் நாம் எட்ட நினைக்கும் லட்சியத்தை ஒரு நாள் அடையமுடியும்.

சந்தேகம்,கவலை,பயம்,ஐயம் பலரை அதிகமதிகம் வாட்டி எடுத்து அவர்கள் முன்னேற்றத்துக்கு தடைகற்களாக அமைந்து விடுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்த மாதிரியான அச்சங்களையும் கவலைகளையும் தூக்கி எறிந்து விட இவர்களாலும் முடியும் என்பதற்கு உதாரணமாக நம்மை நாமே முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

நாம் நடைபழகும் குழந்தையாக இருக்கும் போது முதல் முறையாக தள்ளாடி தள்ளாடி நடக்க முயற்ச்சிக்கும் போது இந்த உலகமே சுற்றுவது போன்று இருக்குமாம்.

இதனை கண்டு நடைபயிலும் குழந்தைகள் பயந்து நடக்க எத்தனிக்கும் முயற்சியை விட்டுவிடுவதில்லை.சோர்ந்துவிடுவதில்லை.

மாறாக எப்படியும் சீக்கிரம் நடந்துவிட வேண்டும் என்ற தீப்பிழம்பு ஆழமாக நடைபயிலும் மழலைகள் மனதில் இயற்கையாகவே இருப்பதால் தான் இவர்களால் எழுந்து நடப்பது சாத்தியமாகிறது.

நாம் மழலைகளாக தவழும் பருவத்தில் அச்சம்,பயம் இருந்திருக்குமேயால் நம்மால் நடக்க முடிந்திருக்குமா.? சற்று யோசித்து பாருங்கள்..ஆக விடாமுயற்சிக்கு உதாரணமாக நம்மை நாமே எடுத்து கொள்ளலாம்.

முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்று இல்லை.
விடாமுயற்சி,தன்னம்பிக்கை,லட்சியம் என்கிற கயிற்றினை பற்றி பிடித்து கொண்டால் வெற்றி நம் கைக்கு எட்டும் தூரத்தில் தான் என்பதை நாம் மனதில் உறுதியாகவும் திண்ணமாகவும் கொள்ளல் வேண்டும்.

நேசத்துடன்
முஜிப்-அல்கோபர்

Saturday, April 08, 2006

ஓர் சிந்தனை....

ஓர் சிந்தனை....

நீங்கள்,
நீங்களாக்கி கொள்ளூங்கள்- உண்மையாக
ஒத்து கொள்ளூங்கள்- பொருத்தமாக
மதிப்பிட்டு கொள்ளுங்கள்-மகிழ்ச்சியாக
மன்னித்து கொள்ளூங்கள்- முழுவதுமாக
நடந்து கொள்ளுங்கள்- பெருந்தன்மையாக
நிலைபடுத்தி கொள்ளுங்கள்-இணக்கமாக
மகிழ்ச்சிபடுத்தி கொள்ளுங்கள்-அதிகமாக
நம்பி கொள்ளுங்கள்-உறுதியாக
காதல் கொள்ளுங்கள்-மனப்பூர்வமாக
பழக்கபடுத்தி கொள்ளுங்கள்-பிராத்தனையாக
அர்பணித்து கொள்ளுங்கள்-உற்சாகமாக
வெளிப்படுத்தி கொள்ளுங்கள்-சுடரொளியாக.

நேசத்துடன்
முஜிப்

மறக்க முடியாத தருணங்கள்-6

மறக்க முடியாத தருணங்கள்-6
சமீபத்தில் என் மனைவி எங்கள் திருமண ஆல்பத்தை சரி செய்திருக்கிறாள்.அது சமயம் என் மகள் ஆல்பத்தை பிடுங்கி ஒவ்வொரு போட்டோவாக இது டாடி,இது அம்மா அப்படி இப்படின்னு அளந்து பேசி முத்தம் போட்டு விட்டு ஆல்பத்தை என் மனைவியிடம் கொடுத்து விட்டு "என் கூட நீ பேச வேண்டாம் போ" என்றிருக்கிறாள் என் மனைவியிடம் கோபித்து கொண்டவளாய் என் செல்ல மகள்.

என் மனைவிக்கு இவள் கோபம் சற்றென்று புரியவில்லை. ஏன் நல்லா தானே ஆசையா போட்டோல்லாம் பார்த்தே?, என்னாச்சுன்னு கேட்கப் போக என் மகள் சொல்லியிருக்கிறாள்,
"பின்ன என்னவாம் ஒரு போட்டோவுல கூட உங்க பக்கத்துல என்னை வைச்சி படம் எடுக்கலைன்னு".

என் மனைவி தொலைபேசியில் இந்த சுவாரஸ்யமான செய்தியை சொல்லப்போக நானும் என் மனைவியும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
அப்ப நீங்க???
ஹிஹி...
நேசத்துடன்
முஜிப்

Wednesday, April 05, 2006

பல்வேறு வயது நிலைகளில் நம் அப்பாவை பற்றி என்ன நினைப்போம்?

பல்வேறு வயது நிலைகளில் ஓர் பையன்/பொண்னு தன் அப்பாவை பற்றி கேட்டால் எப்படியெல்லாம் சொல்லுவார்கள்.

பாருங்கள்.சிரியுங்கள்.சிந்தியுங்கள்....

4 வயதாகும் போது-
எங்க அப்பா ரொம்ப நல்லவரு.

6 வயதாகும் போது-
எங்கப்பாவுக்கு எல்லாரையும் தெரியும்.

10 வயதாகும் போது-
எங்கப்பா நல்லவரு தான் ஆனா சரியான சிடுமூஞ்சி.

12 வயதாகும் போது-
ஹீம்.. எங்கப்பா நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது ரொம்ப அன்பா நடந்துகிட்டார்.

14 வயதாகும் போது-
இப்பல்லாம் எங்கப்பா தொட்டதுக்கெல்லாம் குறை கண்டுபிடிக்கிறாரு.

16 வயதாகும் போது-
எங்கப்பா இன்னும் பழங்காலத்திலே மண்டி கிடக்கிறார்.
எப்பத் தான் இவ்வுலகத்துக்கு மாறுவாரோ தெரியலை.

18 வயதாகும் போது-
எங்கப்பாக்கு வர வர மரை அதிகமா கழன்று போயிட்டுருக்கு.

20 வயதாகும் போது-
இப்பல்லாம் எங்கப்பாவோட தொல்லைகளை சகித்து கொள்ள முடிய மாட்டேங்குது.
பாவம்!!எப்படி தான் இவ்வளவு காலமா எங்கம்மா பொறுத்துகிட்டு இருக்காங்களோ தெரியலைப்பா.

25 வயதாகும் போது-
நான் எது சொன்னாலும் அதில் தப்பு கண்டுபிடிச்சி திட்டிட்டுறுக்கார்.
லொல்லு தாங்க முடியலை.

30 வயதாகும் போது-
வர வர என் மகனை சாமாளிப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.
நான் எல்லாம் இவன் வயசில் எங்கப்பாவுக்கு பயந்துகிட்டிருந்தேன்.

40 வயதாகும் போது-
எங்கப்பா என்னை ரொம்ப ஒழுக்கத்தோடு வளர்த்தார்.
நானும் என் பையனை ஒழுக்கத்தோடு தான் வளர்ப்பேன்.

45 வயதாகும் போது-
எப்படி தான் எங்கப்பா எங்களையெல்லாம் வளர்த்தாரோ?
நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு.

50 வயதாகும் போது-
எங்கப்பா எங்களையெல்லாம் இந்த நிலைமைக்கு கொண்டுவர ரொம்ப கஷ்டங்களையும் துயரங்களையும் சந்தித்தார்.
இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் என்னால ஒரு மகனை சமாளிக்கிறது ரொமப கஷ்டமா தெரியுது.

55 வயதாகும் போது-
எங்கப்பா தொலைநோக்கு பார்வையுடன் எங்கள் நல்லதுக்காக நிறைய செஞ்சார்.
அவர் போல அன்பானவரை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்.

60 வயதாகும் போது-
எங்கப்பா போல வராது.எங்கப்பா எங்கப்பா தான்.!!!

ஆக 56 வருஷம் ஆனதுக்கப்புறம் நம் அப்பாவின் உண்மையான மதிப்பு நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.நாட்கள் கடந்து விடுவதற்கு முன் நம் பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து மதித்து நடக்க பழக்கபடுத்தி கொள்ள முயற்சிக்கவேண்டும்.

நேசத்துடன்
முஜிப்

காற்றே,உந்தன் பெயர் தான் காதலோ?

காற்றே,உந்தன் பெயர் தான் காதலோ?

சமயங்களில்

தென்றலாய் தவழ்ந்து வந்து
மகிழ்ச்சியாய் இதயத்தை வருடுகிறாய்!!!

அமைதியாய் சப்தம் இல்லாது
நினைவுகளை தந்து மெளனிக்கிறாய்!!!

குளிர்ச்சியாய் உள்ளமெங்கும் பரவி
பசுமையான நிகழ்வுகளை அசைபோடுகிறாய்!!

நெருப்பாய் உயிர் பெற்று
இதயத்தை வாட்டி எடுத்து சோதிக்கிறாய்!!!

சூறாவளியாய் சுழன்று வந்து
சேதம் ஏற்படுத்தி மீளாத்துயரில் ஆழ்த்துகிறாய்!!!

நேசத்துடன்
முஜிப்

புன்னகை

புன்னகை

என்றென்றும் பண்புநயமும் புன்னகையும்
மழலையர் முகம் போல் மலரட்டும் நம் வாழ்வில்,
மனக்கஷ்டத்தில் உழலும் அநேகர்களுக்கு
மறுமலர்ச்சி அடைய செய்யும் அருமருந்தாக...

நாளை ஒருகால் நாம் கஷ்டத்தில் உழலும் தருணம்
யாரேனும் நமை பார்த்து உதிர்க்கும் புன்னகை
பொன்நகையாக மகிழ்ச்சியின் பக்கம்
நம்மை அலங்கரிக்குமல்லவோ???

இதற்கு ஏது ஈடு இப்புவிதனில்
எனவே விலையற்ற,விலைமதிப்பிடமுடியாத
புன்னகை சிந்துங்கள் பொன்நகை போல் என்றென்றும்....

நேசத்துடன்
முஜிப்.

Tuesday, April 04, 2006

மறக்க முடியாத தருணங்கள்-5

மறக்க முடியாத தருணங்கள்-5

நான் சமீபத்தில் தாயகம் அதாங்க எங்க கிராமத்துக்கு விடுமுறையில் சென்றிருந்த போது நடந்த இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது.

ஒரு நாள் அந்திமாலைபொழுதில் என் அப்பா கொல்லைபுற கடைசியில், வேளைக்கு ஓர் ஆளை வைத்து கொண்டு விறகுகளை அடுக்க சொல்லி அதன் அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.

நானும் அச்சமயம் கொல்லைபுறம் சென்று எப்படி வேலை நடக்கிறது என்று பார்த்து கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தில் என் மகள் (வயசு 3+ அப்போது) கொல்லைபுறம் வந்து என் அருகில் நின்று கொண்டாள்.

என் அப்பா கொல்லைபுறம் செருப்பு போடாமல் வந்தால் திட்டுவார்கள் என்பதால் ஐஸ் வைப்பதற்காக என் அப்பாவை பார்த்து என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்கப்பா என்று கேட்டாள்.

அதற்கு என் தகப்பனார் விளையாடிகிட்டு இருக்கேன் என்று கிண்டலாக பதில் சொன்னார்கள்.என் அப்பா சொன்னது என் காதில் நன்றாக விழுந்தது.என் பக்கத்தில் நின்றிருந்த அவள் காதிலும் நன்றாக கேட்டிருக்கும்.

ஆனால் என் மகள் சிரிச்சிகிட்டே என்னப்பா சொன்னீங்க.என் காதுல விழலப்பா என்று திரும்ப மடக்கினாள்.மறுபடியும் என் தகப்பனார் விளையாடிகிட்டு இருக்கேன் என்று பதில் சொல்ல அப்புறம் நான் சிரித்ததற்கு பிறகு தான் என் தகப்பனாருக்கு என் மகளின் மடக்கல் புரிந்தது.

அப்போது நான் மனதுக்குள் நினைத்து சிரித்து கொண்டேன்.நம்ம பொண்ணு லொல்லு பண்ணுவதில் எங்கே நமக்கே அல்வா கொடுத்துடுவா போலிருக்கேன்னு..

ஹா ஹா.

நேசத்துடன்
முஜிப்-அல்கோபர்

Saturday, April 01, 2006

மறக்க முடியாத தருணங்கள்-4

மறக்க முடியாத தருணங்கள்-4

கடந்த வாரம் எங்கூட்டுகாரங்களுக்கு சளி பிடித்திருந்தது.என் மனைவிக்கு சளி பிடித்திருந்தால் தொண்டையை சரி செய்ய கரகரவென்று கனைப்பது வழக்கம்.

இதே போல் நான் ஊரில் இருக்கும் போது செய்தால் கிண்டலுக்காக நானும் சேர்ந்து கர கரவென்று சவுண்ட் விட்டு வாங்கி கட்டி கொள்வது வழக்கம்.

ஆனால் இது போன்ற சேட்டைகளை என் மகளின் (தற்போது வயது 4) பார்வையில் ஒரு போதும் செய்தது இல்லை.

இரண்டொரு நாட்களுக்கு முன் ஓர் பொன்மாலை பொழுதில் என் மகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருக்கிறாங்க என் மனைவி.அப்போது இடையே குரலை சரி செய்ய கர கர (அட்ஜஸ்மெண்ட்) சரி செய்திருக்கிறாள்.

அச்சமயத்தில் நன்றாக படித்து கொண்டிருந்த என் மகள் (என்னை போலவே) படிப்பதை நிறுத்தி விட்டு என் மனைவி செய்வதை போலவே கர கர தொண்டை சரி செய்வது போல இமிடேட் பண்ணி விட்டு டக்கென்று திரும்ப படிக்கஆரம்பித்திருக்கிறாள் என் செல்ல மகள் :-)

இதை பார்த்து வியந்து, உடனே பொறுக்க முடியாமல் என் மனைவி எனக்கு தொலைபேசி மூலம் இந்த சுவையான நிகழ்வை "உங்க மகள் உங்களை மாதிரியேநக்கலடிக்கிறாங்க" என்று சொல்லி ஆதங்கப்பட ஒரு கணம் என் கண்கள் என் மகளை தேடியது.வாரி அணைத்து கொள்ள கைகள் துடிதுடித்தது.அன்றைய இரவு தூங்க மறுத்தன என் கண்கள்.

உங்கள் விமர்சனங்களையும், பின்னூட்டங்களையும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.
பின்னூட்ட மின்னஞ்சல் : mujibudeen@gmail.com

நேசத்துடன்
முஜிப்-அல் கோபர்
அலைபேசி : 00966-565128721

Wednesday, March 29, 2006

மறக்க முடியாத தருணங்கள்-3

மறக்க முடியாத தருணங்கள்-3

சமீபத்தில் நடந்த ஓர் சுவையான நிகழ்ச்சி.

நான் சமீபத்தில் எங்க ஊருக்கு விடுமுறையில் சென்று வந்தேன்.அப்போது நான் ஊரில் இருந்த சமயத்தில் என் இனிய நண்பர் திருமணத்துக்காக நானும் என் மனைவியும் வாசுதேவநல்லூர் வரை சென்றிருந்தோம்.

வாசுதேவநல்லூர் தென்காசியில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரை சேர்ந்தவர் தான் இயக்குனர் S.J.சூர்யா.சரி விசயத்துக்கு வருவோம். எங்கள் ஊரில் இருந்து வாசுதேவநல்லூர் நீண்ட தூரமாக இருப்பதால் முதன் முறையாக எங்கள் செல்ல மகளை என் அம்மாவிடம் விட்டு விட்டு சென்று விட்டோம்.

திருமணம் முடிந்து அப்படியே இன்னொரு நண்பரை தென்காசியில் சந்தித்து விட்டு அப்படியே குற்றாலம் சென்று குளித்து விட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு சில பொருட்களை ஞாபகார்த்தமாக வாங்கி சென்றோம்.

அதில் என் மகளுக்கு ஒரு நைட்டி வாங்கினோம். அப்புறம் நான் சவுதி வந்து விட்டேன். ஒரு நாள் என் மகள் அஸிரா (வயது 3+) ஏதேச்சையாக சொல்லியிருக்கா என் மனைவியிடம்,நீயும் டாடியும் என்னை விட்டுட்டு ஊருக்கு போனீங்கள்ல அப்போ எனக்கு ஒன்னுமே சரியா வரும் போது வாங்கிட்டு வரலைன்னு.

அதுக்கு என் மனைவி சொல்லி இருக்காங்க ஏன் உனக்கு தான் நைட்டி வாங்கிட்டு வந்தோமே என்று. அதுக்கு வாண்டு சொல்லியிருக்கு சீ... அது எனக்கு புடிக்கவே இல்லை.நல்ல ட்ரஸ் வாங்கிட்டு வந்தா என்னாவான்னு கேட்டிருக்கா.

அதுக்கு அப்புறம் அந்த நைட்டியை வாண்டு போட்டுக்கவே மறுத்து விட்டதாம்.இத என் மனைவி என்னிடம் தொலைபேசும் போது சொன்னாள்.நானும் உடனே மனசுக்குள் நினைத்து கொண்டேன் அவளுக்கு அந்த நைட்டி பிடிக்கலை போலிருக்குன்னு.

சில நாட்கள் கழித்து என் மகளிடம் தொலைபேசும் போது கேட்டேன். ஏம்மா உனக்கு நான் வாங்கி கொடுத்த நைட்டி பிடிக்கலையான்னு. நான் கேட்டு முடிப்பதற்குள் முந்தி கொண்டு என் மகள் இல்லையே எனக்கு அந்த நைட்டி பிடிக்குமே.நீங்க ஊருக்கு வரும் போது அதே மாதிரி ஐந்து நைட்டி வாங்கிட்டு வாங்க டாடின்னு சொல்ல அவளின் சமயோஜித புத்தியை நினைத்து சிரித்து விட்டேன்.

அப்புறம் மறுநாள் மனைவியிடம் இருந்து குறுந்தகவல் வருகிறது அன்றிறவு அடம் பண்ணி அந்த நைட்டிய போட்டுகிட்டு தான் உங்க மகள் இரவு தூங்கினாள் என்று.இது எப்படி இருக்கு.நான் மனசுக்குள் நினைத்து கொண்டேன்.இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் விவரமானவங்க நம்மள மாதிரி இல்லைன்னு.

நேசத்துடன் முஜிப்

மறக்க முடியாத தருணங்கள்-2

மறக்க முடியாத தருணங்கள்-2
கல்லூரி நாட்கள் வாழ்வின் வசந்த காலம்.பசுமையான நினைவுகளின் பெட்டகம்.சுதந்திரமாய் சுற்றி திரிந்த அந்த கல்லூரி நாட்கள் அப்பப்பா இப்போதும் நினைத்து பார்க்கையில் நாக்கில் எச்சில் ஊறுகிறது.
நான் படித்தது முதல் மூன்று வருடங்கள் மாலை நேரக் கல்லூரியில். எங்கள் கல்லூரி (autonomous) தன்னிச்சையாக செயல்படும் கல்லூரிகளில் முதலிடத்தை ஓர் வருடம் வகித்திருக்கிறது.நம்ம இயக்குனர் T.ராஜேந்தர் படித்த கல்லூரியும் இது தான்.அப்புறம் ஒரு தலைராகம் படமாக்கப்பட்டதும் இக்கல்லூரியில் தான்.மாங்கா மடையா கல்லூரி பெயரை சொல்லுடான்னு நீங்கள்லாம் திட்டுறது என் காதில் விழுகிறது. A.V.C. கல்லூரி,மயிலாடுதுறை.

மாலை நேரக் கல்லூரி என்பதால் பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.ஆனால் இளங்கலையில் மட்டும் ஆண்களுக்கும் பெண்களூக்கும் தனித்தனி வகுப்புகள் தான்.நீங்கலெல்லாம் feel பண்ணுறது எனக்கு புரியுது.என்ன பண்ண.காலத்தின் கட்டாயம்.

ஒரே ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியை சொல்லி முடித்து கொள்கிறேன் அப்போதைக்கு.கல்லூரியில் சேர்ந்து ஓர் இரண்டு மாதங்கள் இருக்கும். நான் அன்று சற்று ஓர் 15 நிமிடங்கள் தாமதமாக வகுப்புக்கு சென்றேன்.
தமிழ் விரிவுரையாளர் என்னை மேலும் கீழும் பார்த்தார்.பிறது வருகை பதிவேடு எடுத்து பார்த்தார்.அப்போது தான் தெரிந்தது என் நண்பன் எனக்காக அடெண்டென்ஸ் கொடுத்திருந்தது.
திட்டி தீர்க்கப்போகிறார் என்று அனைவரும் இறுக்கத்துடன் அமர்ந்திருக்க சிறிது நேரம் அமைதி காத்த ஆசிரியர் சரி உள்ளே வா என்று எனக்கு அனுமதி அளித்துவிட்டு அடப்பாவிங்களா,இத்தனை நாளா வகுப்புக்கு வராதவனுக்கு தான் அடெண்டென்ஸ் கொடுப்பீங்கன்னு நினைச்சிருந்தா வகுப்புக்கு வர்றவனுக்கும் கொடுத்திருக்கீங்களேப்பான்னு வாய் விட்டு சிரிச்சார்.
சிறிது நேரம் அறை முழுவதும் சிரிப்பலைகளும்,விசில் சத்தமும்,மேசை தட்டலும் இனிதே அரங்கேறியது....
ஹிஹி
நேசத்துடன்-முஜிப்

Sunday, March 26, 2006

என் மகள் அடித்த லூட்டி

என் மகள் அடித்த லூட்டி

சமீபத்தில் நான் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி. அன்று எங்கள் வீட்டின் குளிர் சாதனப் பெட்டி பழுது
பார்ப்பதற்காக AC technician வந்திருந்தார்.


அப்போது அறையை திறந்து உள்ளே சென்ற போது என் கூடவே என் மகள் அஸீராவும்,என் தங்கை மகளும் (வயது 3+இருவருக்கும்) உடன் வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துகொண்டிருந்தார்கள்.

வந்தவர் பழுது பார்த்து கொண்டிருந்தார்.நான் இருவரையும் சண்டி பண்ணாமல் உட்கார்ந்திருக்கனும் என்று சொல்லி கொண்டிருந்த போது எனது அம்மா,எனக்கும் வந்தவருக்கும் தேனீர் கொண்டு வந்து என்னை கூப்பிட்டார்கள்.

நான் அதை வாங்கி வந்து AC technician வசம் மரியாதையாக காபி சாப்பிடுங்க என்று சொல்ல போக, இதை உன்னித்து பார்த்து கொண்டிருந்த என் மகள் டக்கென்று
காபி எல்லாம் சாப்பிட கூடாது டாடி,குடிக்கணும்
ன்னு சொல்ல,என் முகத்தில் ஈ ஆடாத குறையாக இஞ்சி தின்ற குரங்காக நான் வழிய,பழுது நீக்க வந்திருந்தவர் குபீர் என அவரை அறியாமலே சிரித்து விட்டார்.

நேசத்துடன்
முஜிப்

மறக்க முடியாத தருணங்கள்-1

மறக்க முடியாத தருணங்கள்-1

ஐஸ் கிரீம் என்றவுடன் மறக்காமல் நினைவுக்கு வருவது.சே!!!இது என்ன விளம்பரமா என்ன.என்னடா எடுத்த எடுப்புலேயே கடிக்கிறானேன்னு பயந்துறாதீங்க.இதுவும் என் வாழ்வின் மறக்க முடியாத சுவாரஸ்யமான விசயம் தான்.சமீபத்தில் நான் விடுமுறையில் சென்றிருந்த போது ஒரு உறவினர் வீட்டுக்கு நட்பு பாராட்ட செல்லும் வழியில் ஓர் பல்பொருள் அங்காடிக்கு அவர்கள் வீட்டுக்கு கொஞ்சம் பிஸ்கெட்,பழம்,ஸ்வீட்ஸ் வாங்கலாம் என்று சென்றேன்,என் இரு குழந்தைகளோடு(என் மனைவி,மகள்).

வெளியே சென்றால் இருவரும் சாப்பிடும் விசயத்தில் குழந்தைகள் தான்,எதையும் முழுவதுமாக,ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள்.அரைகுறை தான்.(இப்படி தான் ,ஒரு முறை ஓர் ஹோட்டலுக்கு சென்று ஸ்பெஸல் தோசை ஆர்டர் செய்து என் மனைவி பாதிக்கு மேல் சாப்பிட முடியாமல் நெளிய அக்கம் பக்கம் பார்த்து யாருக்கும் தெரியாமல் திட்டி விட்டு நான் எடுத்து வைத்து தின்னு தொலைத்தேன்.சரி விசயத்துக்கு வர்றேன்.

அப்போது என் மகள் ஐஸ் கிரீம் வேண்டும் என்று அடம்பிடிக்க நான் ஒரு சின்ன ஐஸ் கீரிமை எடுத்து கொடுக்க கிங் சைஸ் தான் வேண்டும் என்று என் மகள் அடம் பிடிக்க அதையே எடுத்து கொடுக்க வேண்டியதாயிற்று.என் மனைவிக்கும் அதே போல் ஒரு ஐஸ்கிரீம் எடுத்து கொடுத்தேன்.நீங்களும் ஒன்னு எடுத்துக்கங்கன்னு என் மனைவி சொல்ல ,நான் பெருந்தன்மையா எனக்கு வேணாம்னு show காட்டினேன்.

என் மனசுக்குல்ல ஐஸ்கிரீம் சாப்பிடனும்னு எச்சில் ஊறினாலும் பாதிக்கு மேல சாப்பிடாம ஐஸ்கிரீம் நமக்கு தானே வரப்போறதுன்னு நினைப்பு.இருவரும் முக்கி முக்கி முழுவதுமாக சாப்பிட்டு விட்டார்கள்.நக்கியாவது கடைசியில் டேஸ்ட் பார்க்கலாம்ன்னு பார்த்தால் இருவரும் அதற்கும் இடம் வைக்கவில்லை.

கடைசியாக வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது பொறுக்க முடியாது என் மனைவியிடம் சொன்னேன்.நல்லா இரண்டு பேரும் கொஞ்சம் கூட எனக்கு கொடுக்காம தின்னு பழி வாங்கிட்டீங்கல்லன்னு.சரியான ட்யூப் லைட்டு!!! யாரு ஐஸ்கீரிம சாப்பிடாம தூக்கி கொடுப்பான்னு என் மனைவிக்கு ஒரே சிரிப்பு நல்லா வேணும்,நல்லா வேணும்னு!!.

நினைப்பு பொழப்ப கெடுத்துச்சாம்.அன்றைக்கு அது என் விசயத்தில் உண்மையாகிவிட்டிருந்தது.ஆனாலும் எனக்குள் ஓர் ஆத்ம திருப்தி,கொடுத்த பணத்துக்கு வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டு முடித்து விட்டார்களே என்று.
புண்பட்ட மனச புகை போட்டு ஆத்திக்கணும் என்பார்களே,அது இப்படி தானா என்கிறீர்களா அன்பர்களே?

நேசத்துடன்
முஜிப்

Wednesday, March 22, 2006

அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா?

அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா?

ஓர் சுவையான உண்மை நிகழ்ச்சியின் மூலம் என் உரையை சுருக்கமாஆரம்பித்து முடிக்கலாம் என்றிருக்கிறேன்.
இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் ஓர் சிறு விருந்து நடந்து கொண்டிருந்தது.அதில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து ஓர் சொந்த காரர் என் வயதை ஒத்தவர் தான் தன் மனைவியுடன் கலந்து கொண்டார்.அவர் என் நண்பரும் கூட.அன்றைய தினம் 3 மணிக்கு ஓர் முக்கியமான நபரை சந்திக்க போகணும் என்று வந்த மாத்திரத்திலேயே என்னிடம் சொல்லிவிட்டார்.தன் மனைவியிடமும் இவ்விசயத்தை சொல்லி தான் அழைத்து வந்ததாவும் சொன்னார்.

சரியாக 1:30 மதியம் ஆண்கள் விருந்து நடந்தது.ஓர் 8-10 ஆண்கள் தான் என்பதால் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து விட்டோம்.சாப்பிட ஆரம்பிக்கும் போது நண்பர் எவ்வளவு நேரம் எடுக்குதுன்னு பார்த்து சொல்லுங்கன்னு அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் தமாஷாக சொன்னார்.நானும் நேரத்தை குறித்து கொண்டேன்.எங்கள் பந்தி சாப்பிட்டு முடிக்க தோராயமாக ஓர் 15 நிமிஷம் ஆனது.

அப்போது எனக்கு தெரியாது எதற்காக நேரத்தை நண்பர் கணக்கிட சொன்னார் என்று. சாப்பிட்டு முடித்தவுடன் அவரிடமே கேட்டேன் ஏன் நண்பா சாப்பிடும் நேரத்தை கணக்கிட சொன்னீர்கள் என்று.அவர் சொன்னார்,அந்த காமெடிய நீங்க இப்ப பார்க்கத்தானே போகிறீர்கள்.

இப்போ பெண்கள் பந்தி நடக்கும்ல.அப்போ அவங்க சாப்பிடும் நேரத்தை கணக்கிட்டு சொல்லுங்க.அப்ப புரியும் நான் ஏன் அப்படி செய்ய சொன்னேன் என்று பதில் அளித்தார்.

சரியாக 2 மணிக்கு பெண்கள் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.சரி என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம் என்று அனைவரும் சொந்த காரர்கள் என்பதால் சர்வே அவர்களின் செய்கைகளையும் படம் பிடிக்க ஆரம்பித்தது கண்கள்.

சரியாக பெண்கள் சாப்பிட்டு முடிக்க 40 நிமிஷம் ஆனது. ஒரு வாய் கவளம் வாய்க்கு போனதுக்கு அப்புறம் தோராயமாக ஓர் ஐந்து நிமிடம் பேச்சு பேச்சு.பேச்சை தவிர வேறொன்றும் இல்லை.

அப்படி என்னத்த தான் இந்த பெண்கள் பேசுவாங்களோ தெரியலைப்பா.அப்புறம் தான் தெரிந்து கொண்டேன்.பெண்கள் பேச ஆரம்பித்தால் உலகத்தையே மறந்துடுவாங்கன்னு.

இடைஇடையே என் நண்பர் வேற பொறுக்க முடியாம திட்டி/நெளிந்து கொண்டே பாருங்க முஜிப் சாப்பிடுதுங்களான்னு,தொனத்தொனன்னு பேச்சு தான் தெரியுதே ஒழிஞ்சி சாப்பிட்டு எழுந்திறிப்போம் என்கிற எண்ணமே இவர்களுக்கு வராது என்று அலுத்து கொண்டார். அவர் எங்கள் வீட்டை விட்டு கிளம்ப 2:50 ஆகி விட்டது.அப்புறம் எங்க அவர் சொன்ன சந்திப்பு 3 மணிக்கு நடந்திருக்க போகிறது.???கோவிந்தா கோவிந்தா தான்!!!!!!!
ஹா ஹா

நேசத்துடன்
முஜிப்

Monday, March 20, 2006

விடுமுறை நாட்கள் கழிந்து வந்த பின்

கண்களின் ஓரம் ஏனோ ஈரம்..
நெஞ்சினில் குடிபுகுந்தது சோகம்..

இறக்கி வைக்க முடியாத பாரம்..
பிரிவதனால் ஏற்பட்டதோ ஏக்கம்..

நினைவுகளால் தொலைந்து போனது தூக்கம்..
காலத்தின் கட்டாயம் இந்த மாற்றம்..

தொலைபேசி ஊடாக அனேக பறிமாற்றம்..
நட்புகளால் இடை செறுகலாக ஊக்கம்..

ஊதியமாக வந்து போகும் உற்சாகம்..
படி படியாக குறைந்து விடும் தாக்கம்..

அடுத்த பயண எதிர்பார்ப்பு அநேகம்..
உண்மையில் இது ஓர் தியாகம்........

நேசத்துடன்
முஜிப்

விடுமுறை நாட்கள்

என் விடுமுறை நாட்கள்
மனதுக்குள் தென்றல் தவழ்ந்து வரும் காற்றலைகளாய்!
வண்ணமயில்கள் தோகை விரித்தாடும் குதூகலமாய்!!
வண்ணமலர்கள் பூத்து குலுங்கும் பூஞ்சோலையாய்!!!

கூக்குரல்கள் செந்தமிழ் ராகங்களாய் பாட்டிசைக்க!
மகிழ்ச்சியெனும் மழைசாரலில் இதமாய் நனைந்து!!
பாலகனாய் கற்பனைகளுடன் இல்லம் போய்சேர!!!

சொந்தபந்தங்கள் நட்புபாராட்ட சிலிர்க்கவைக்கும் தருணங்களாய்!
பாசமலர்கள் அரவணைப்பில் நொடிப்பொழுதில் நாட்பொழுதுகளாய்!!
தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் விருந்தோம்பல்களாய்!!!

நண்பர்களின் ஆக்கிரமிப்பில் கண்ணெதிரே நினைவலைகளாய்!நினைத்தபொழுதில் அங்குமிங்கும் சுற்றி திறியும் சிட்டுகுருவியாய்!!மழலைகளிடம் மாட்டிகொண்டு விழிபிதுங்கிய நிகழ்வுகளாய்!!!

பொறுப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் நிமிடங்களாய்!
பிரிவின் மகத்துவத்தை எடுத்துறைக்கும் மெய்சிலிர்ப்புகளாய்!!
சோகத்தின்ஊடே பொறுப்பின் பயணம் தொடர்கிறது!!!

பி.கு.: இந்த தொகுப்பு, சொந்த பந்தங்களை,நண்பர்களை பிரிந்து சவுதியில் வேலையில் இருக்கும் நான் விடுமுறையில் தாயகம் செல்லும்/சென்றிருந்த போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தாக்கம்.
நேசத்துடன்
முஜிப் - அல்கோபர்

ஆண்டவனிடம் கேட்டதும்,கிடைக்கப் பெற்றதும்

நான் ஆண்டவனிடம் கேட்டதும்,அவனால் கிடைக்கப் பெற்றதும்...

நான் ஆண்டவனிடம் துணிவு,வலிமையினை கேட்டேன்.
ஆனால் அவன் எனக்கு இடர்பாடுகளை கொடுத்து என்னை மேலும் வலிமையுள்ளவனாக்கினான்...

நான் ஆண்டவனிடம் நுண்ணறிவாற்றலை கேட்டேன்.
அவன் எனக்கு பிரச்சனைகளை கொடுத்து நுண்ணறிவாற்றலுக்கு விடை காண தூண்டினான்...

நான் அவனிடம் சொத்து சுகத்தினை கேட்டேன்.
அவன் எனக்கு சிந்திக்கும் முளையையும்,வலிமையையும் கொடுத்து வேலை செய்ய தூண்டினான்...

நான் அவனிடம் வீரம்,துணிவினை கேட்டேன்.
அவன் எனக்கு ஆபத்தை கொடுத்து அதிலிருந்து விடுபடுவதெப்படி என்பதை கற்று தந்தான்...

நான் அவனிடம் அன்பாதரவிவை கேட்டேன்.
அவன் எனக்கு நல்ல சந்தர்பங்களை ஏற்படுத்தி கொடுத்தான்...

நான் கேட்ட எதுவும் அவன் எனக்கு கொடுக்கவில்லை.
ஆனால் எனக்கு தேவையான அனைத்தும் அவனால் கிடைக்கப்பெற்றேன்.
நேசத்துடன்
முஜிப்

காதல் காதல் காதல்

காதலை இப்படி வகைப்படுத்தலாமா...

சந்தர்ப்பத்தால் காதல் பிறக்கும்!!!
தெய்வீகத்தால் காதல் சிறக்கும்!!!

விட்டுக்கொடுத்தலால் காதல் நெகிழும்!!!
அரவணைப்பால் காதல் பூரிக்கும்!!!

நேசிப்பால் காதல் புன்னகைக்கும்!!!
கனவுகளால் காதல் சிறகடிக்கும்!!!

பிரிவுகளால் காதல் நிலைக்கும்!!!
சம்பாஷனைகளால் காதல் வளரும்!!!

புரிந்துகொள்ளுதலால் காதல் நிறையும்!!!
நினைவலைகளால் காதல் மகிழும்!!!

(சமயத்தில் விம்மி அழும்....)!!!!!!

நேசத்துடன்
முஜிப்

ஓர் வேண்டுகோள்

எங்கள் இறைவா,
எங்களுக்கு...


அன்பை தா
அருளை தா
அனுதினமும் தா...

பண்பை தா
பாசத்தை தா
தழைத்தோங்கத் தா...

உழைப்பை தா
உயர்வை தா
பார்புகழத் தா...

பொன்னை தா
பொருளை தா
மனமகிழத் தா...

அமைதியை தா
மனிதத்தை தா
இப்புவியெங்கும் தா...

மகிழ்ச்சியை தா
குதூகலத்தை தா
என்றென்றும் தா...

வெற்றியை தா
விவேகத்தை தா
வீறுநடைபோடத் தா...

தன்னிறைவை தா
மனநிறைவை தா
அனைவருக்கும் தா...

சமத்துவத்தை தா
நிதானத்தை தா
மனம்நிறையத் தா...

நேசத்துடன்
முஜிப்