விடுமுறை நாட்கள் கழிந்து வந்த பின்
கண்களின் ஓரம் ஏனோ ஈரம்..
நெஞ்சினில் குடிபுகுந்தது சோகம்..
இறக்கி வைக்க முடியாத பாரம்..
பிரிவதனால் ஏற்பட்டதோ ஏக்கம்..
நினைவுகளால் தொலைந்து போனது தூக்கம்..
காலத்தின் கட்டாயம் இந்த மாற்றம்..
தொலைபேசி ஊடாக அனேக பறிமாற்றம்..
நட்புகளால் இடை செறுகலாக ஊக்கம்..
ஊதியமாக வந்து போகும் உற்சாகம்..
படி படியாக குறைந்து விடும் தாக்கம்..
அடுத்த பயண எதிர்பார்ப்பு அநேகம்..
உண்மையில் இது ஓர் தியாகம்........
நேசத்துடன்
முஜிப்
1 Comments:
வாங்க வாங்க. எழுதுங்க. கலக்குங்க.
வாழ்த்துக்கள்.
Post a Comment
<< Home