என் மன வானில்

Wednesday, March 22, 2006

அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா?

அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா?

ஓர் சுவையான உண்மை நிகழ்ச்சியின் மூலம் என் உரையை சுருக்கமாஆரம்பித்து முடிக்கலாம் என்றிருக்கிறேன்.
இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் ஓர் சிறு விருந்து நடந்து கொண்டிருந்தது.அதில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து ஓர் சொந்த காரர் என் வயதை ஒத்தவர் தான் தன் மனைவியுடன் கலந்து கொண்டார்.அவர் என் நண்பரும் கூட.அன்றைய தினம் 3 மணிக்கு ஓர் முக்கியமான நபரை சந்திக்க போகணும் என்று வந்த மாத்திரத்திலேயே என்னிடம் சொல்லிவிட்டார்.தன் மனைவியிடமும் இவ்விசயத்தை சொல்லி தான் அழைத்து வந்ததாவும் சொன்னார்.

சரியாக 1:30 மதியம் ஆண்கள் விருந்து நடந்தது.ஓர் 8-10 ஆண்கள் தான் என்பதால் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து விட்டோம்.சாப்பிட ஆரம்பிக்கும் போது நண்பர் எவ்வளவு நேரம் எடுக்குதுன்னு பார்த்து சொல்லுங்கன்னு அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் தமாஷாக சொன்னார்.நானும் நேரத்தை குறித்து கொண்டேன்.எங்கள் பந்தி சாப்பிட்டு முடிக்க தோராயமாக ஓர் 15 நிமிஷம் ஆனது.

அப்போது எனக்கு தெரியாது எதற்காக நேரத்தை நண்பர் கணக்கிட சொன்னார் என்று. சாப்பிட்டு முடித்தவுடன் அவரிடமே கேட்டேன் ஏன் நண்பா சாப்பிடும் நேரத்தை கணக்கிட சொன்னீர்கள் என்று.அவர் சொன்னார்,அந்த காமெடிய நீங்க இப்ப பார்க்கத்தானே போகிறீர்கள்.

இப்போ பெண்கள் பந்தி நடக்கும்ல.அப்போ அவங்க சாப்பிடும் நேரத்தை கணக்கிட்டு சொல்லுங்க.அப்ப புரியும் நான் ஏன் அப்படி செய்ய சொன்னேன் என்று பதில் அளித்தார்.

சரியாக 2 மணிக்கு பெண்கள் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.சரி என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம் என்று அனைவரும் சொந்த காரர்கள் என்பதால் சர்வே அவர்களின் செய்கைகளையும் படம் பிடிக்க ஆரம்பித்தது கண்கள்.

சரியாக பெண்கள் சாப்பிட்டு முடிக்க 40 நிமிஷம் ஆனது. ஒரு வாய் கவளம் வாய்க்கு போனதுக்கு அப்புறம் தோராயமாக ஓர் ஐந்து நிமிடம் பேச்சு பேச்சு.பேச்சை தவிர வேறொன்றும் இல்லை.

அப்படி என்னத்த தான் இந்த பெண்கள் பேசுவாங்களோ தெரியலைப்பா.அப்புறம் தான் தெரிந்து கொண்டேன்.பெண்கள் பேச ஆரம்பித்தால் உலகத்தையே மறந்துடுவாங்கன்னு.

இடைஇடையே என் நண்பர் வேற பொறுக்க முடியாம திட்டி/நெளிந்து கொண்டே பாருங்க முஜிப் சாப்பிடுதுங்களான்னு,தொனத்தொனன்னு பேச்சு தான் தெரியுதே ஒழிஞ்சி சாப்பிட்டு எழுந்திறிப்போம் என்கிற எண்ணமே இவர்களுக்கு வராது என்று அலுத்து கொண்டார். அவர் எங்கள் வீட்டை விட்டு கிளம்ப 2:50 ஆகி விட்டது.அப்புறம் எங்க அவர் சொன்ன சந்திப்பு 3 மணிக்கு நடந்திருக்க போகிறது.???கோவிந்தா கோவிந்தா தான்!!!!!!!
ஹா ஹா

நேசத்துடன்
முஜிப்

4 Comments:

At 9:24 PM, Blogger Dr.Srishiv said...

hahaha அருமௌ முஜிப், என் பின்னூட்டம் வருகிறதா??
ஸ்ரீஷிவ்

 
At 9:34 PM, Blogger புங்கைமுஜீப் said...

ipoo varuthu nanba.
naanum kongam noondi paarthen.
thiruthha

 
At 5:18 AM, Blogger rnatesan said...

குழந்தையும் அப்பனைப் போல் கற்பூரப் புத்தி!!குழந்தை வரும் காலத்தில் சீரும் சிறப்புமாய் வாழும் ,என் ஆசிர்வாதங்கள்!!!

 
At 10:22 AM, Anonymous Anonymous said...

ரொம்ப டூ மச் ப்பா!

 

Post a Comment

<< Home