என் மன வானில்

Sunday, March 26, 2006

மறக்க முடியாத தருணங்கள்-1

மறக்க முடியாத தருணங்கள்-1

ஐஸ் கிரீம் என்றவுடன் மறக்காமல் நினைவுக்கு வருவது.சே!!!இது என்ன விளம்பரமா என்ன.என்னடா எடுத்த எடுப்புலேயே கடிக்கிறானேன்னு பயந்துறாதீங்க.இதுவும் என் வாழ்வின் மறக்க முடியாத சுவாரஸ்யமான விசயம் தான்.சமீபத்தில் நான் விடுமுறையில் சென்றிருந்த போது ஒரு உறவினர் வீட்டுக்கு நட்பு பாராட்ட செல்லும் வழியில் ஓர் பல்பொருள் அங்காடிக்கு அவர்கள் வீட்டுக்கு கொஞ்சம் பிஸ்கெட்,பழம்,ஸ்வீட்ஸ் வாங்கலாம் என்று சென்றேன்,என் இரு குழந்தைகளோடு(என் மனைவி,மகள்).

வெளியே சென்றால் இருவரும் சாப்பிடும் விசயத்தில் குழந்தைகள் தான்,எதையும் முழுவதுமாக,ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள்.அரைகுறை தான்.(இப்படி தான் ,ஒரு முறை ஓர் ஹோட்டலுக்கு சென்று ஸ்பெஸல் தோசை ஆர்டர் செய்து என் மனைவி பாதிக்கு மேல் சாப்பிட முடியாமல் நெளிய அக்கம் பக்கம் பார்த்து யாருக்கும் தெரியாமல் திட்டி விட்டு நான் எடுத்து வைத்து தின்னு தொலைத்தேன்.சரி விசயத்துக்கு வர்றேன்.

அப்போது என் மகள் ஐஸ் கிரீம் வேண்டும் என்று அடம்பிடிக்க நான் ஒரு சின்ன ஐஸ் கீரிமை எடுத்து கொடுக்க கிங் சைஸ் தான் வேண்டும் என்று என் மகள் அடம் பிடிக்க அதையே எடுத்து கொடுக்க வேண்டியதாயிற்று.என் மனைவிக்கும் அதே போல் ஒரு ஐஸ்கிரீம் எடுத்து கொடுத்தேன்.நீங்களும் ஒன்னு எடுத்துக்கங்கன்னு என் மனைவி சொல்ல ,நான் பெருந்தன்மையா எனக்கு வேணாம்னு show காட்டினேன்.

என் மனசுக்குல்ல ஐஸ்கிரீம் சாப்பிடனும்னு எச்சில் ஊறினாலும் பாதிக்கு மேல சாப்பிடாம ஐஸ்கிரீம் நமக்கு தானே வரப்போறதுன்னு நினைப்பு.இருவரும் முக்கி முக்கி முழுவதுமாக சாப்பிட்டு விட்டார்கள்.நக்கியாவது கடைசியில் டேஸ்ட் பார்க்கலாம்ன்னு பார்த்தால் இருவரும் அதற்கும் இடம் வைக்கவில்லை.

கடைசியாக வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது பொறுக்க முடியாது என் மனைவியிடம் சொன்னேன்.நல்லா இரண்டு பேரும் கொஞ்சம் கூட எனக்கு கொடுக்காம தின்னு பழி வாங்கிட்டீங்கல்லன்னு.சரியான ட்யூப் லைட்டு!!! யாரு ஐஸ்கீரிம சாப்பிடாம தூக்கி கொடுப்பான்னு என் மனைவிக்கு ஒரே சிரிப்பு நல்லா வேணும்,நல்லா வேணும்னு!!.

நினைப்பு பொழப்ப கெடுத்துச்சாம்.அன்றைக்கு அது என் விசயத்தில் உண்மையாகிவிட்டிருந்தது.ஆனாலும் எனக்குள் ஓர் ஆத்ம திருப்தி,கொடுத்த பணத்துக்கு வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டு முடித்து விட்டார்களே என்று.
புண்பட்ட மனச புகை போட்டு ஆத்திக்கணும் என்பார்களே,அது இப்படி தானா என்கிறீர்களா அன்பர்களே?

நேசத்துடன்
முஜிப்

1 Comments:

At 4:30 AM, Anonymous Anonymous said...

vow, arputhamana nizhalvu + padhivu. migavum rasiththen.

 

Post a Comment

<< Home