என் மன வானில்

Thursday, August 10, 2006

some cool proverbs

காமாலை கண்களுக்கு ,பார்ப்பதெல்லாம் மஞ்சளாகவே தெரியும்.
புதிய துடைப்பத்தால் பெருக்கினால் மிக நன்றாக சுத்தம் செய்யும்.அனால் பழைய துடைப்பானுக்கு தான் மூலை முடுக்குகள் எல்லாம் அத்துபடி.
கற்பனை எனும் காற்றாடியால் மட்டுமே உங்களால் மிக உயர்ந்த தூரத்தில் பறக்க முடியும்.
முயற்சியை கைவிடாத வரை நீங்கள் தோற்றவராக மாட்டீர்கள்.
கடனாக வாங்க படும் எந்த ஒரு பொருளின் விலையும் அதிகமாகவே தெரியாது. (வாழ்க கடன் அட்டை J)
அறிந்து கொள்ளுதல் மட்டும் போதாது.அதை செயலில் காட்ட வேண்டும்.
விருப்பப்படுவது மட்டும் போதாது.அதை செய்து காட்ட வேண்டும்.
ஒரு பிரச்சனையை எந்தளவுக்கு பெரியதாக பார்க்கிறீர்களோ,அந்தளவுக்கு பெரியதாக தெரியும்
பருவங்களில் பழங்கள் காய்க்கும்.காரணங்களால் கவலைகள் தாக்கும்.
நற்குணம் அழகை விட பன்மடங்கு மேன்மையானது.
பயனில பேச்சு நம்பகத்தன்மையை சாகடித்து விடும்.
அறிவுடையவராக இருத்தல் நலம்.அதை விட மேலானது அன்பாக நடந்து கொள்வது.
உத்தமன் தான் பின்பற்றும் நல்விசயங்களை மட்டுமே பிறருக்கு உபதேசம் செய்வான்.
போர் ஒரு போதும் யார் நல்லவர் என்பதை தீர்மானிக்காது.ஆனால் எத்தனை பேர் எஞ்சியுள்ளார்கள் என்பதை நிச்சயம் தீர்மானிக்கும்.

நேசத்துடன்
முஜிப்

1 Comments:

At 12:45 PM, Blogger சேதுக்கரசி said...

தமிழ்மணத்தில் & தேன்கூட்டில் உங்கள் பதிவுகள் வருகின்றனவா? இரண்டிலும் மறுமொழி நிலவரமும் தெரியச் செய்யலாமே? இன்னும் அதிகமானவாகளைச் சென்றடையும். தேவைப்பட்டால் சொல்லுங்கள், ஜெயபாரதனுக்கும் ஆனந்துக்கும் நான் தொகுத்தனுப்பிய மடலை அனுப்பிவைக்கிறேன்.

 

Post a Comment

<< Home