மறக்க முடியாத தருணம்
எப்போது என் மனைவியிடம் தொலைப்பேசும் போது என் செல்ல மகள் என்ன செய்கிறாள்,என்ன சொல்கிறாள் என்று கேட்டறிவது வழக்கம்.அது போல இன்று தொலைபேசும்போது கேட்டேன்.
இரண்டொரு நாட்களுக்கு முன் சற்று சீக்கிரமே என் மகளை படுக்க சொல்லியிருக்கிறாள் என் மனைவி.படுத்திருந்த என் மகள்,சிறிது நேரம் கழித்து என் மகள் அடுக்களையில் இருந்த என் மனைவியின் காதில் விழும்பைடி "அம்மா இங்கே வாயேன்.உன்னிடம் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்" என்று கூப்பிட்டிருக்கிறாள்.
சரி ஏதோ சேதி சொல்ல தான் கூப்பிடுகிறாள் என்று அப்படி என்ன செய்திடி என்று கேட்டு கொண்டே என் மனைவி அவள் அருகில் செல்ல கிட்ட வா என்று கூப்பிட்டு என் மனைவியை உட்கார சொல்லி கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டுட்டு வாம்மான்னு நக்கலடித்திருக்கிறாள்.
என் மனைவிக்கு கோபம் சுறீரென்று உடனே வந்தாலும் அடக்கி கொண்டு குபீரென சிரித்திருக்கிறாள்.
இந்த செய்தியை என் மனைவி இன்று தொலைபேசும் போது சொல்ல நான் இல்லாத குறையை உனக்கு என் மகள் தீர்த்து வைக்கிறாள் என்று என் மனைவியிடம் சொல்ல,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்று என் மனைவி அலுத்து கொள்ள, நான் விழுந்து விழுந்து சிரிக்க என் மனைவியும் சிரித்து வயிறு வலி எடுத்துடுச்சி போங்க...
நேசத்துடன்முஜிப்
0 Comments:
Post a Comment
<< Home