என் மன வானில்

Wednesday, June 07, 2006

தோல்வி

வாழ்க்கையை வெறுப்பது ஏனோ,
பெற்றோரை நினையாதது ஏனோ,
சுற்றத்தாரை மறப்பது ஏனோ,
நண்பர்களை துறப்பது ஏனோ,
வெற்றியே வாழ்க்கையாகிவிடுமா?
தோல்வியில் கண்ட படிப்பினையில்
உனை நீ ஏன் திருத்தி கொள்ளலாகாது?
பெற்றோர்,உறவினர்,நண்பர்களின் சந்தோஷத்தை
பூர்த்தி செய்வதும் உன் கடமையல்லவா?
உயிரை மாய்த்து கொள்வதும்,
நடைமுறையை விட்டு தூரம் செல்வதும்
உன் தோல்விக்கு தீர்வாகி விடுமா?
உன் தனிபட்ட தோல்விக்காக
உனை சூழ்ந்துள்ளவர்களையும்
சோகத்தில் ஆழ்த்துவது நியாகமாகுமோ?
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி,
கூடியுள்ளவர்களின் நிறைவில்
உன் நிறைவை காண
ஆவண செய்வாய் மானிடா...

நேசத்துடன்
முஜிப்

1 Comments:

At 4:29 AM, Blogger மாயவரத்தான் said...

எப்படிடா நண்பா?! கலக்குறே போ!

 

Post a Comment

<< Home