கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க
நடு சாமத்தில் தீடீரென தூக்கம் கலைந்த மனைவி உடன் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த கணவனை காணாமல் தேடுகிறாள்.
கடைசியாக கீழ் தளத்தில் கணவனின் முனகல் சத்தத்தை கேட்டு மாடியிலிருந்து கீழ் இறங்கி வந்து விளக்கை போட்டு பார்க்கும்போது ஆச்சர்ய படும்படி தன் கணவன் ஒரு பந்தை போல் முழங்காலை மடித்து குருகி உட்கார்ந்தவராய் கன்னத்தில் கையை வைத்து கொண்டு விம்முவதை பார்த்து, "இந்த நடு சாமத்தில் ஏன் என்னாச்சு உங்களுக்கு", என்று பதற்றபட்டவளாய் கணவனிடம் வினவ, அதற்கு கணவன்,20 வருடத்துக்கு முன் உன்னை கர்ப்பமாக்கினேனே,அது உனக்கு ஞாபகமிருக்கிறதா?.
அதற்கு மனைவி, மறக்க கூடிய விசயமா அது? அதுக்கென்ன இப்போ?.
அந்த சமயத்தில் உன் (வழக்கறிஞர்) அப்பா,உன்னை கல்யாணம் பண்ணிகலன்னா 20 வருஷம் உள்ள தள்ளிடுவேன்னு பயமுறுத்தினாரே? ஞாபகமிருக்கிறதா?
ம். அதுக்கென்ன இப்போ?
வேறுன்னுமில்ல,அழுகையை அடக்க முடியாது உடல் குலுங்கியவராய்,"அப்போதே நான் ஜெயிலுக்கு போயிருந்தேன்ணா நேற்று நான் விடுதலையாகியிருப்பேன்"
ஹா ஹா
முஜிப்
3 Comments:
நண்பா!
உங்க விடுதலை நாள் எப்போ? :)
I really don't know what language that is. But it looks wonderful :-)
Greatings from the other side of the world.
இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படியே சொல்லிட்டு இருக்கப் போறீங்களோ.. :)
Post a Comment
<< Home