என் மன வானில்

Wednesday, March 29, 2006

மறக்க முடியாத தருணங்கள்-2

மறக்க முடியாத தருணங்கள்-2
கல்லூரி நாட்கள் வாழ்வின் வசந்த காலம்.பசுமையான நினைவுகளின் பெட்டகம்.சுதந்திரமாய் சுற்றி திரிந்த அந்த கல்லூரி நாட்கள் அப்பப்பா இப்போதும் நினைத்து பார்க்கையில் நாக்கில் எச்சில் ஊறுகிறது.
நான் படித்தது முதல் மூன்று வருடங்கள் மாலை நேரக் கல்லூரியில். எங்கள் கல்லூரி (autonomous) தன்னிச்சையாக செயல்படும் கல்லூரிகளில் முதலிடத்தை ஓர் வருடம் வகித்திருக்கிறது.நம்ம இயக்குனர் T.ராஜேந்தர் படித்த கல்லூரியும் இது தான்.அப்புறம் ஒரு தலைராகம் படமாக்கப்பட்டதும் இக்கல்லூரியில் தான்.மாங்கா மடையா கல்லூரி பெயரை சொல்லுடான்னு நீங்கள்லாம் திட்டுறது என் காதில் விழுகிறது. A.V.C. கல்லூரி,மயிலாடுதுறை.

மாலை நேரக் கல்லூரி என்பதால் பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.ஆனால் இளங்கலையில் மட்டும் ஆண்களுக்கும் பெண்களூக்கும் தனித்தனி வகுப்புகள் தான்.நீங்கலெல்லாம் feel பண்ணுறது எனக்கு புரியுது.என்ன பண்ண.காலத்தின் கட்டாயம்.

ஒரே ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியை சொல்லி முடித்து கொள்கிறேன் அப்போதைக்கு.கல்லூரியில் சேர்ந்து ஓர் இரண்டு மாதங்கள் இருக்கும். நான் அன்று சற்று ஓர் 15 நிமிடங்கள் தாமதமாக வகுப்புக்கு சென்றேன்.
தமிழ் விரிவுரையாளர் என்னை மேலும் கீழும் பார்த்தார்.பிறது வருகை பதிவேடு எடுத்து பார்த்தார்.அப்போது தான் தெரிந்தது என் நண்பன் எனக்காக அடெண்டென்ஸ் கொடுத்திருந்தது.
திட்டி தீர்க்கப்போகிறார் என்று அனைவரும் இறுக்கத்துடன் அமர்ந்திருக்க சிறிது நேரம் அமைதி காத்த ஆசிரியர் சரி உள்ளே வா என்று எனக்கு அனுமதி அளித்துவிட்டு அடப்பாவிங்களா,இத்தனை நாளா வகுப்புக்கு வராதவனுக்கு தான் அடெண்டென்ஸ் கொடுப்பீங்கன்னு நினைச்சிருந்தா வகுப்புக்கு வர்றவனுக்கும் கொடுத்திருக்கீங்களேப்பான்னு வாய் விட்டு சிரிச்சார்.
சிறிது நேரம் அறை முழுவதும் சிரிப்பலைகளும்,விசில் சத்தமும்,மேசை தட்டலும் இனிதே அரங்கேறியது....
ஹிஹி
நேசத்துடன்-முஜிப்

1 Comments:

At 6:22 AM, Blogger மாயவரத்தான் said...

அடப்பாவி.. இது எப்போ நடந்திச்சு எனக்கு தெரியாம?!

 

Post a Comment

<< Home