என் மன வானில்

Saturday, April 29, 2006

பரவசம்-ஓர் கவிதை


முதன் முதலில்....

மழலை மொழி பேச
கேட்ட தாய் அடைந்த
பரவசத்தை போல...

முதல் மதிப்பெண் எடுத்து
தேர்ச்சி பெற்ற மாணவனின்
பரவசத்தை போல...

லாட்டரியில் முதல் பரிசு
கிடைக்க பெற்ற வறியனின்
பரவசத்தை போல...

அறுவடையில் அமோக மகசூல்
பெற்ற ஏழை விவசாயியின்
பரவசத்தை போல...

தவம் இருந்து பெற்றெடுத்த
குழந்தையை பார்த்த தம்பதியினரின்
பரவசத்தை போல...

பாகுபாடு இல்லா மனிதநேயம்
போற்றிடும் உங்களை நட்பாக
கிடைக்கபெற்ற நான்
மகிழ்ச்சியில் பரவசமடைகிறேன்.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

0 Comments:

Post a Comment

<< Home