என் மன வானில்

Tuesday, May 02, 2006

ஓவியமும் வாழ்க்கையும்


வாழ்க்கையென்பது வர்ணமடிக்க பயன்படும் பலகை போன்றது.

உங்கள் மேனி,பண்பு இன்னும் நாடு மற்றும் குடும்ப பிறப்பிடம் போன்ற பண்பு நலன்களால் ஓர் ஆன்மாவாக நீங்களே உங்கள் ஆரம்ப நிறத்தினை தெரிவு செய்கிறீர்கள்.

பின்பு வாழ்க்கையெனும் கலைத்திறனை வரைய வண்ணந் தீட்டும்
தூரிகையோடும்,வண்ணங்களோடும் வாழ்க்கையெனும் பயணத்தில் சங்கமிக்கிறீர்கள்.

இந்த இடத்தில் தான் அதிகமானோர் தடுமாறுகிறார்கள்.

வாழ்க்கையெனும் வர்ணந் தீட்டும் தூரிகையால் வர்ணங்களை ஒன்றின் மேல் ஒன்றாக தவறுதலாக தெளித்து விட்டு நம் வாழ்க்கை எனும் ஓவியம் நாம் நினைத்த மாதிரி அமையவில்லையே என்று வியந்து கொள்கிறார்கள்...

உங்கள் வாழ்க்கையானது எவரேனும் ஒருவரின் தவறோ,பிழையோ அல்லது பொறுப்பாகவோ ஒரு போதும் ஆகாது.

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளானது மகிழ்ச்சி எனும் வர்ணம் தீட்டும் தூரிகையால் உங்களுக்கு பிடித்த உண்மையான வாழ்க்கை எனும் ஓவியத்தை வரைவதாகும்.

இவ் ஓவியத்தை சரியென்றோ தவறென்றோ கொள்ளலாகாது என்றாலும் கூட நீங்கள் இதில் ஒரு போதும் தோல்வி அடைய மாட்டீர்கள்.!!!!!!!
முஜிப்-அல்கோபர்

0 Comments:

Post a Comment

<< Home