என் மன வானில்

Wednesday, March 29, 2006

மறக்க முடியாத தருணங்கள்-3

மறக்க முடியாத தருணங்கள்-3

சமீபத்தில் நடந்த ஓர் சுவையான நிகழ்ச்சி.

நான் சமீபத்தில் எங்க ஊருக்கு விடுமுறையில் சென்று வந்தேன்.அப்போது நான் ஊரில் இருந்த சமயத்தில் என் இனிய நண்பர் திருமணத்துக்காக நானும் என் மனைவியும் வாசுதேவநல்லூர் வரை சென்றிருந்தோம்.

வாசுதேவநல்லூர் தென்காசியில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரை சேர்ந்தவர் தான் இயக்குனர் S.J.சூர்யா.சரி விசயத்துக்கு வருவோம். எங்கள் ஊரில் இருந்து வாசுதேவநல்லூர் நீண்ட தூரமாக இருப்பதால் முதன் முறையாக எங்கள் செல்ல மகளை என் அம்மாவிடம் விட்டு விட்டு சென்று விட்டோம்.

திருமணம் முடிந்து அப்படியே இன்னொரு நண்பரை தென்காசியில் சந்தித்து விட்டு அப்படியே குற்றாலம் சென்று குளித்து விட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு சில பொருட்களை ஞாபகார்த்தமாக வாங்கி சென்றோம்.

அதில் என் மகளுக்கு ஒரு நைட்டி வாங்கினோம். அப்புறம் நான் சவுதி வந்து விட்டேன். ஒரு நாள் என் மகள் அஸிரா (வயது 3+) ஏதேச்சையாக சொல்லியிருக்கா என் மனைவியிடம்,நீயும் டாடியும் என்னை விட்டுட்டு ஊருக்கு போனீங்கள்ல அப்போ எனக்கு ஒன்னுமே சரியா வரும் போது வாங்கிட்டு வரலைன்னு.

அதுக்கு என் மனைவி சொல்லி இருக்காங்க ஏன் உனக்கு தான் நைட்டி வாங்கிட்டு வந்தோமே என்று. அதுக்கு வாண்டு சொல்லியிருக்கு சீ... அது எனக்கு புடிக்கவே இல்லை.நல்ல ட்ரஸ் வாங்கிட்டு வந்தா என்னாவான்னு கேட்டிருக்கா.

அதுக்கு அப்புறம் அந்த நைட்டியை வாண்டு போட்டுக்கவே மறுத்து விட்டதாம்.இத என் மனைவி என்னிடம் தொலைபேசும் போது சொன்னாள்.நானும் உடனே மனசுக்குள் நினைத்து கொண்டேன் அவளுக்கு அந்த நைட்டி பிடிக்கலை போலிருக்குன்னு.

சில நாட்கள் கழித்து என் மகளிடம் தொலைபேசும் போது கேட்டேன். ஏம்மா உனக்கு நான் வாங்கி கொடுத்த நைட்டி பிடிக்கலையான்னு. நான் கேட்டு முடிப்பதற்குள் முந்தி கொண்டு என் மகள் இல்லையே எனக்கு அந்த நைட்டி பிடிக்குமே.நீங்க ஊருக்கு வரும் போது அதே மாதிரி ஐந்து நைட்டி வாங்கிட்டு வாங்க டாடின்னு சொல்ல அவளின் சமயோஜித புத்தியை நினைத்து சிரித்து விட்டேன்.

அப்புறம் மறுநாள் மனைவியிடம் இருந்து குறுந்தகவல் வருகிறது அன்றிறவு அடம் பண்ணி அந்த நைட்டிய போட்டுகிட்டு தான் உங்க மகள் இரவு தூங்கினாள் என்று.இது எப்படி இருக்கு.நான் மனசுக்குள் நினைத்து கொண்டேன்.இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் விவரமானவங்க நம்மள மாதிரி இல்லைன்னு.

நேசத்துடன் முஜிப்

3 Comments:

At 12:12 PM, Blogger Premalatha said...

it is more to do with your words asking her about it.

 
At 7:43 AM, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

இப்ப உள்ள பிள்ளைங்க எல்லாம் ரொம்ப பத்திசாலியா இருக்காங்க முஜிப்..உங்களைவிடவும்..

 
At 10:17 AM, Anonymous Anonymous said...

:) உங்க பொண்ணு சமத்து முஜிப்..

 

Post a Comment

<< Home