என் மன வானில்

Monday, April 10, 2006

மறக்க முடியாத தருணங்கள்-8

மறக்க முடியாத தருணங்கள்-8

சமீபத்தில் இங்கு அல்கோபரில் வழமையாக உணவருந்த செல்லும் ஹோட்டலுக்கு என் நண்பர்களுடன் சென்றிருந்தேன்.நண்பர்களில் ஒருவன் எப்போதும் சிரிக்கும் படியாக ஜோக் அடித்து கொண்டே இருப்பான்.

ஆளாளுக்கு தேவையானதை ஆர்டர் செய்தோம். இவனை தவிர அனைவரும் சிக்கன் ப்ரை ஆர்டர் கொடுக்க (இவனுக்கு பறவை காய்ச்சல் வந்து விடுமோ என்று பயம்னு நினைக்கிறேன். ஏன் என்று சொன்னால் எப்போதும் சிக்கன் ஆர்டர் கொடுப்பவன் எனக்கு சிக்கன் வேண்டாம் மட்டன் குருமா வேணும்மு ஆர்டர் கொடுத்தான்).

மட்டன் குருமா முந்தைய நாள் சமைத்ததை ரீமேக் போல சுவையே இல்லை போலிருக்கு. இவன் உடனே சர்வரை கூப்பிட்டான். இங்க பாருங்க என் கிட்ட ஒரு மக்கினா (அரபியில் மக்கினா என்றால் இயந்திரம்) இருக்கு. அது பொய் பேசினா உடனே சத்தம் கொடுக்கும் என்று சொல்லி விட்டு மட்டன் குருமா எப்ப ரெடி பண்ணது ன்னு கேட்டான்.

வழக்கம் போல் வழமையாக சொல்வது போல் சர்வர் "இன்னிக்கி தாங்க சமைத்தது" என்று சொல்ல, இவன் உடனே "டோன்ய்ய்ய்ய்" என்று சத்தம் கொடுக்க உணவருந்துபவர்கள், உரிமையாளர் உட்பட அனைவரும் அடக்க முடியாமல் குபீரென சிறிது நேரம் சிரித்து விட்டனர்.

நேசத்துடன்
முஜிப்

0 Comments:

Post a Comment

<< Home