என் மன வானில்

Monday, April 10, 2006

நான் ரசிக்கும் கிராம வாழ்க்கை.

நான் ரசிக்கும் கிராம வாழ்க்கை.
கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் அருமை என்னவென்று.
  • நட்பு வட்டம்.
  • உறவினர் வட்டம்.
  • ஊரார் வட்டம்
என்று அமர்க்களபடும் கிராமங்களில்.
  • ஓர் சின்ன விசயம் என்றாலும் கூட வீடுகளில் உறவினர்களும் நண்பர்களும் கூடி விடுவார்கள்.
  • சொந்த பந்தங்கள் ஊரார் அனைவரையும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
  • சிறிது நாட்கள் வெளியூர் சென்று திரும்பினாலும் கூட பார்ப்பவர் அனைவரும் நலம் விசாரித்து அன்பு மழை பொழிவர்.
  • சமயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வீடுகளில் உதவு கோராமலேயே உதவி கொண்டிருப்பார்கள் நல விரும்பிகள்.
  • பலனை எதிர்பார்க்காது பழகும் தன்மையையும்,ஊருக்காக ஊர் நலனுக்காக தங்களை அர்பணித்து கொள்ளும் பெரியவர்களையும் சிறியவர்களையும் அதிகம் கிராமங்களில் காணலாம்.
  • பச்சை பசேல் வயல்வெளிகள், ஆறுகள், குட்டைகள், குளங்கள், ஆராவாரமற்ற நெருக்கடி இல்லாத ரம்மியமான சூழ்நிலை,என்று கிராமங்களில் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்.
  • பணம் ஒன்றே குறிக்கோள் என்றில்லாதவர்கள் நிச்சயம் கிராமங்களையும் அதன் வேர்களாக பிண்ணி பிணைந்திருக்கும் சொந்த பந்த நட்புகளை விட்டு ஒரு போதும் தூரம் சென்றுவிடமாட்டார்கள்.
கிராமங்களில் தற்காலத்திற்கேற்ப வசதி வாய்ப்புகளும் நவீன வசதிகளும் சற்று குறைவாகவே இருந்தாலும் கூட மனம் லயிக்கும் கிராமத்தின் சிறப்புகளுக்கும் சொந்த பந்த நட்புகளின் அன்புக்கு முன்னால் என் பார்வையில் கிராம,நகர வாழ்க்கைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது கிராம வாழ்க்கையே மேலாதனாகவும் மேலூங்கியும் கம்பீரமாக நிற்கிறது.

நேசத்துடன்
முஜிப்

0 Comments:

Post a Comment

<< Home