என் மன வானில்

Tuesday, April 18, 2006

மறக்க முடியாத தருணங்கள்-9

சமீபத்தில் எங்கள் செல்ல மகளை பள்ளியில் சேர்த்தாச்சு. இன்னும் பள்ளி செல்லவில்லை.ட்யூஷன் படிச்சிட்டுருக்காங்க.

கொஞ்ச நாட்களுக்கு முன் என் மகளிடம் தொலைபேசும்போது (எங்கூட்டு காரங்க SSLC வரை தான் படிச்சிருக்காங்க.) உங்க அம்மா மாதிரி படிக்காம இருந்திடாதே.உன் டாடி மாதிரி நல்லா படிச்சி பெயர் வாங்கணுன்னு விளையாட்டாய் சொன்னேன்.

இத லவ்டு ஸ்பீக்கர் மோட்ல கேட்டுட்டு உடனே போனை பிடுங்கி என் மனைவி ஒரே திட்டு.ஒன்னும் சொல்ல முடியாம வாங்கி கட்டிகிட்டேன்.

பிரச்சனை என் மனைவி திட்டினது இல்லை.சரி விசயத்துக்கு வருகிறேன்.இரண்டொரு நாட்களுக்கு முன் என் மனைவி,என் மகளை படிக்க சொல்லி பக்கத்தில் உட்கார்ந்திருக்காங்க.

அப்போ என் மகள் கேட்டிருக்கா.

"ஏம்மா டாடி என்னைய மாதிரி நல்லா சவுதில படிக்குதாம்மா.நீ மட்டும் ஏன் படிக்காம சும்மா என்னை மட்டும் படிக்க சொல்லுற.டாடி மாதிரி நீயும் படிக்கலாம்ல " என்று கேட்க,திடீர் கேள்வி கணைகளால் திக்குமுக்காடி பதில் சொல்ல முடியாமல் எங்கூட்டுகாரங்க சிரிச்சி,வழிஞ்சி ஒரு வழியா பதில் சொல்லி சமாளிச்சிருக்காங்க.

என் மனைவி தொலைபேசியில் இந்த சுவையான நிகழ்வை சொல்லும் போது நான் சிரித்தாலும் கூட,என் செல்ல மகளின் லூட்டிகளை நேரில் இருந்து பார்த்து ரசிக்க முடியாததை நினைத்து மனசுக்குள் ஏக்கம் ஏற்பட்டு புழுங்கியது என்னவோ உண்மை.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

1 Comments:

At 10:09 AM, Anonymous Anonymous said...

ஆமாம் முஜிப். சில விஷயங்கள் வாழ்வில் முக்கியமான தருணங்கள்.. குழந்தையில் சேஷ்டைகள் பொக்கிஷம்..

 

Post a Comment

<< Home