என் மன வானில்

Monday, April 10, 2006

வெற்றியின் ரகசியங்கள்

வெற்றியின் ரகசியங்கள்

கப்பல் கரையில் இருந்தால் பாதுகாப்பாக, பத்திரமாகத் தான் இருக்கும். ஆனால் கப்பல் தயாரிக்கப்பட்டதன் குறிக்கோள் இதற்காக அல்ல.

ஒரு காரியம் எடுத்து செயல்படுத்தும் தருணங்களில் சமயங்களில்,இன்னல் துயரங்கள்,கஷ்டங்களை சந்திக்க நேரிடுவது வாடிக்கையே. இதனை கண்டு நாம் சோர்ந்து விடுதல் கூடாது.

நாம் நெஞ்சுரத்தையும்,மனோவலிமையையும் தைரியத்தையும், கஷ்டநஷ்டங்களை சமாளிக்கும் யுக்திகளை வளர்த்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும்.அப்போது தான் நாம் எட்ட நினைக்கும் லட்சியத்தை ஒரு நாள் அடையமுடியும்.

சந்தேகம்,கவலை,பயம்,ஐயம் பலரை அதிகமதிகம் வாட்டி எடுத்து அவர்கள் முன்னேற்றத்துக்கு தடைகற்களாக அமைந்து விடுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்த மாதிரியான அச்சங்களையும் கவலைகளையும் தூக்கி எறிந்து விட இவர்களாலும் முடியும் என்பதற்கு உதாரணமாக நம்மை நாமே முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

நாம் நடைபழகும் குழந்தையாக இருக்கும் போது முதல் முறையாக தள்ளாடி தள்ளாடி நடக்க முயற்ச்சிக்கும் போது இந்த உலகமே சுற்றுவது போன்று இருக்குமாம்.

இதனை கண்டு நடைபயிலும் குழந்தைகள் பயந்து நடக்க எத்தனிக்கும் முயற்சியை விட்டுவிடுவதில்லை.சோர்ந்துவிடுவதில்லை.

மாறாக எப்படியும் சீக்கிரம் நடந்துவிட வேண்டும் என்ற தீப்பிழம்பு ஆழமாக நடைபயிலும் மழலைகள் மனதில் இயற்கையாகவே இருப்பதால் தான் இவர்களால் எழுந்து நடப்பது சாத்தியமாகிறது.

நாம் மழலைகளாக தவழும் பருவத்தில் அச்சம்,பயம் இருந்திருக்குமேயால் நம்மால் நடக்க முடிந்திருக்குமா.? சற்று யோசித்து பாருங்கள்..ஆக விடாமுயற்சிக்கு உதாரணமாக நம்மை நாமே எடுத்து கொள்ளலாம்.

முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்று இல்லை.
விடாமுயற்சி,தன்னம்பிக்கை,லட்சியம் என்கிற கயிற்றினை பற்றி பிடித்து கொண்டால் வெற்றி நம் கைக்கு எட்டும் தூரத்தில் தான் என்பதை நாம் மனதில் உறுதியாகவும் திண்ணமாகவும் கொள்ளல் வேண்டும்.

நேசத்துடன்
முஜிப்-அல்கோபர்

0 Comments:

Post a Comment

<< Home