என் மன வானில்

Tuesday, April 04, 2006

மறக்க முடியாத தருணங்கள்-5

மறக்க முடியாத தருணங்கள்-5

நான் சமீபத்தில் தாயகம் அதாங்க எங்க கிராமத்துக்கு விடுமுறையில் சென்றிருந்த போது நடந்த இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது.

ஒரு நாள் அந்திமாலைபொழுதில் என் அப்பா கொல்லைபுற கடைசியில், வேளைக்கு ஓர் ஆளை வைத்து கொண்டு விறகுகளை அடுக்க சொல்லி அதன் அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.

நானும் அச்சமயம் கொல்லைபுறம் சென்று எப்படி வேலை நடக்கிறது என்று பார்த்து கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தில் என் மகள் (வயசு 3+ அப்போது) கொல்லைபுறம் வந்து என் அருகில் நின்று கொண்டாள்.

என் அப்பா கொல்லைபுறம் செருப்பு போடாமல் வந்தால் திட்டுவார்கள் என்பதால் ஐஸ் வைப்பதற்காக என் அப்பாவை பார்த்து என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்கப்பா என்று கேட்டாள்.

அதற்கு என் தகப்பனார் விளையாடிகிட்டு இருக்கேன் என்று கிண்டலாக பதில் சொன்னார்கள்.என் அப்பா சொன்னது என் காதில் நன்றாக விழுந்தது.என் பக்கத்தில் நின்றிருந்த அவள் காதிலும் நன்றாக கேட்டிருக்கும்.

ஆனால் என் மகள் சிரிச்சிகிட்டே என்னப்பா சொன்னீங்க.என் காதுல விழலப்பா என்று திரும்ப மடக்கினாள்.மறுபடியும் என் தகப்பனார் விளையாடிகிட்டு இருக்கேன் என்று பதில் சொல்ல அப்புறம் நான் சிரித்ததற்கு பிறகு தான் என் தகப்பனாருக்கு என் மகளின் மடக்கல் புரிந்தது.

அப்போது நான் மனதுக்குள் நினைத்து சிரித்து கொண்டேன்.நம்ம பொண்ணு லொல்லு பண்ணுவதில் எங்கே நமக்கே அல்வா கொடுத்துடுவா போலிருக்கேன்னு..

ஹா ஹா.

நேசத்துடன்
முஜிப்-அல்கோபர்

0 Comments:

Post a Comment

<< Home