என் மன வானில்

Saturday, April 08, 2006

மறக்க முடியாத தருணங்கள்-6

மறக்க முடியாத தருணங்கள்-6
சமீபத்தில் என் மனைவி எங்கள் திருமண ஆல்பத்தை சரி செய்திருக்கிறாள்.அது சமயம் என் மகள் ஆல்பத்தை பிடுங்கி ஒவ்வொரு போட்டோவாக இது டாடி,இது அம்மா அப்படி இப்படின்னு அளந்து பேசி முத்தம் போட்டு விட்டு ஆல்பத்தை என் மனைவியிடம் கொடுத்து விட்டு "என் கூட நீ பேச வேண்டாம் போ" என்றிருக்கிறாள் என் மனைவியிடம் கோபித்து கொண்டவளாய் என் செல்ல மகள்.

என் மனைவிக்கு இவள் கோபம் சற்றென்று புரியவில்லை. ஏன் நல்லா தானே ஆசையா போட்டோல்லாம் பார்த்தே?, என்னாச்சுன்னு கேட்கப் போக என் மகள் சொல்லியிருக்கிறாள்,
"பின்ன என்னவாம் ஒரு போட்டோவுல கூட உங்க பக்கத்துல என்னை வைச்சி படம் எடுக்கலைன்னு".

என் மனைவி தொலைபேசியில் இந்த சுவாரஸ்யமான செய்தியை சொல்லப்போக நானும் என் மனைவியும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
அப்ப நீங்க???
ஹிஹி...
நேசத்துடன்
முஜிப்

0 Comments:

Post a Comment

<< Home