பல்வேறு வயது நிலைகளில் நம் அப்பாவை பற்றி என்ன நினைப்போம்?
பல்வேறு வயது நிலைகளில் ஓர் பையன்/பொண்னு தன் அப்பாவை பற்றி கேட்டால் எப்படியெல்லாம் சொல்லுவார்கள்.
பாருங்கள்.சிரியுங்கள்.சிந்தியுங்கள்....
4 வயதாகும் போது-
எங்க அப்பா ரொம்ப நல்லவரு.
6 வயதாகும் போது-
எங்கப்பாவுக்கு எல்லாரையும் தெரியும்.
10 வயதாகும் போது-
எங்கப்பா நல்லவரு தான் ஆனா சரியான சிடுமூஞ்சி.
12 வயதாகும் போது-
ஹீம்.. எங்கப்பா நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது ரொம்ப அன்பா நடந்துகிட்டார்.
14 வயதாகும் போது-
இப்பல்லாம் எங்கப்பா தொட்டதுக்கெல்லாம் குறை கண்டுபிடிக்கிறாரு.
16 வயதாகும் போது-
எங்கப்பா இன்னும் பழங்காலத்திலே மண்டி கிடக்கிறார்.
எப்பத் தான் இவ்வுலகத்துக்கு மாறுவாரோ தெரியலை.
18 வயதாகும் போது-
எங்கப்பாக்கு வர வர மரை அதிகமா கழன்று போயிட்டுருக்கு.
20 வயதாகும் போது-
இப்பல்லாம் எங்கப்பாவோட தொல்லைகளை சகித்து கொள்ள முடிய மாட்டேங்குது.
பாவம்!!எப்படி தான் இவ்வளவு காலமா எங்கம்மா பொறுத்துகிட்டு இருக்காங்களோ தெரியலைப்பா.
25 வயதாகும் போது-
நான் எது சொன்னாலும் அதில் தப்பு கண்டுபிடிச்சி திட்டிட்டுறுக்கார்.
லொல்லு தாங்க முடியலை.
30 வயதாகும் போது-
வர வர என் மகனை சாமாளிப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.
நான் எல்லாம் இவன் வயசில் எங்கப்பாவுக்கு பயந்துகிட்டிருந்தேன்.
40 வயதாகும் போது-
எங்கப்பா என்னை ரொம்ப ஒழுக்கத்தோடு வளர்த்தார்.
நானும் என் பையனை ஒழுக்கத்தோடு தான் வளர்ப்பேன்.
45 வயதாகும் போது-
எப்படி தான் எங்கப்பா எங்களையெல்லாம் வளர்த்தாரோ?
நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு.
50 வயதாகும் போது-
எங்கப்பா எங்களையெல்லாம் இந்த நிலைமைக்கு கொண்டுவர ரொம்ப கஷ்டங்களையும் துயரங்களையும் சந்தித்தார்.
இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் என்னால ஒரு மகனை சமாளிக்கிறது ரொமப கஷ்டமா தெரியுது.
55 வயதாகும் போது-
எங்கப்பா தொலைநோக்கு பார்வையுடன் எங்கள் நல்லதுக்காக நிறைய செஞ்சார்.
அவர் போல அன்பானவரை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்.
60 வயதாகும் போது-
எங்கப்பா போல வராது.எங்கப்பா எங்கப்பா தான்.!!!
ஆக 56 வருஷம் ஆனதுக்கப்புறம் நம் அப்பாவின் உண்மையான மதிப்பு நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.நாட்கள் கடந்து விடுவதற்கு முன் நம் பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து மதித்து நடக்க பழக்கபடுத்தி கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நேசத்துடன்
முஜிப்
2 Comments:
very good. you r 100% right.
அருமையான கட்டுரை நண்பா...
இன்னும் எழுதுங்கள், அப்பாவின் அருமையை மீண்டும் ஒருமுறை உணரவைத்தமைக்கு நன்றிகள் கோடி...
ஸ்ரீஷிவ்...:)
Post a Comment
<< Home