என் மன வானில்

Wednesday, April 05, 2006

காற்றே,உந்தன் பெயர் தான் காதலோ?

காற்றே,உந்தன் பெயர் தான் காதலோ?

சமயங்களில்

தென்றலாய் தவழ்ந்து வந்து
மகிழ்ச்சியாய் இதயத்தை வருடுகிறாய்!!!

அமைதியாய் சப்தம் இல்லாது
நினைவுகளை தந்து மெளனிக்கிறாய்!!!

குளிர்ச்சியாய் உள்ளமெங்கும் பரவி
பசுமையான நிகழ்வுகளை அசைபோடுகிறாய்!!

நெருப்பாய் உயிர் பெற்று
இதயத்தை வாட்டி எடுத்து சோதிக்கிறாய்!!!

சூறாவளியாய் சுழன்று வந்து
சேதம் ஏற்படுத்தி மீளாத்துயரில் ஆழ்த்துகிறாய்!!!

நேசத்துடன்
முஜிப்

0 Comments:

Post a Comment

<< Home