என் மன வானில்

Wednesday, April 05, 2006

புன்னகை

புன்னகை

என்றென்றும் பண்புநயமும் புன்னகையும்
மழலையர் முகம் போல் மலரட்டும் நம் வாழ்வில்,
மனக்கஷ்டத்தில் உழலும் அநேகர்களுக்கு
மறுமலர்ச்சி அடைய செய்யும் அருமருந்தாக...

நாளை ஒருகால் நாம் கஷ்டத்தில் உழலும் தருணம்
யாரேனும் நமை பார்த்து உதிர்க்கும் புன்னகை
பொன்நகையாக மகிழ்ச்சியின் பக்கம்
நம்மை அலங்கரிக்குமல்லவோ???

இதற்கு ஏது ஈடு இப்புவிதனில்
எனவே விலையற்ற,விலைமதிப்பிடமுடியாத
புன்னகை சிந்துங்கள் பொன்நகை போல் என்றென்றும்....

நேசத்துடன்
முஜிப்.

0 Comments:

Post a Comment

<< Home