நினைவுகள்
தினம் தினம்...
வைகறையின் வசந்தமாய்
இளங்கதிரின் நம்பிக்கையாய்
தென்றல்காற்றின் மென்மையாய்
குயில்களின் சங்கீதமாய்
தமிழ்மொழியின் தேன்சுவையாய்
புயல் காற்றின் சீற்றமாய்
நடுஜாமத்து நிசப்தமாய்
முடிவில்லா கடலலை போல்
பல வித பரிணாமங்களுடன்
தனிமையின் ஊடே
வந்து வந்து செல்கிறது
உன் நினைவுகள்...
நேசத்துடன்
முஜிப்